ரம்யாவின் திருமணம் கோலாகலமாக முடிவடைந்தது. அனைவரும் திருமணம் முடிந்தபின் அங்கங்கே மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அர்ஜுனும் தருணும் மண்டபத்தில் இருந்த அழகான பெண்களை சைட் அடித்துக் கொண்டு இருந்தனர்.
தாரா... கல்யாண பெண் ரம்யா மற்றும் அங்கிருந்த சில பெண்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.
"ஓய் தாரா, யாரடி அது? உன் அண்ணன் கூட ஒரு அழகான பையன் இருக்கான்? " என்று கேட்டாள் ஒரு பெண்.
இவள் யாரை சொல்கிறாள் என்று திரும்பிப் பார்த்த தாராவுக்கு அதிர்ச்சி. அங்கே நின்றுகொண்டிருந்தான் அர்ஜுன். நான்கு வருடத்திற்கு முன் அவனைப் பார்த்தது. அதன்பின்பு அவனைப் புகைப்படத்தில் கூட காணவில்லை இவள். தாடி, தூக்கி நிறுத்திய தலைமுடி, காதில் கடுக்கன் என்று ஆளே மாறி இருந்தான் அர்ஜுன்.
"ஹோ... அங்க உயரமா பணமரம் மாதிரி இருகான்ல அவனதான கேட்கற...? அது தருணோட ஃபிரிண்ட் அர்ஜுன். அவன் ஒரு ஃபிராடு."
"ஃபிராடா இருந்தாலும் பரவாயில்லை. பையன் சூப்பரா இருக்கான். எனக்கு அவன் நம்பர் வேணும். வாங்கி கொடு." என்று அந்த பெண் கேட்க... அதற்கு மற்றொரு பெண் பதிலளித்தாள்... "அவனைவிட நம்ம தருண்தான் அழகு. நான் தருணோட நம்பர ஒரு வருஷமா கேட்டுட்டு இருக்கேன். அதையே இந்த தாரா இன்னும் தரல. "
"அடிப்பாவிங்களா... அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில என் அண்ணாவுக்கு ரூட் விடுறீங்க... தருண் நம்மளை பார்த்துதான் வந்துட்டு இருக்கான். நீ அவன்கிட்டயே நம்பர் வாங்கிக்கோ. "
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தருணும் அர்ஜுனும் இவர்களின் அருகே வந்து சேர்ந்தனர். அர்ஜுன் தாராவை கண்டுகொள்ளாமல் நேராக ரம்யாவிடம் சென்று பேச்சு கொடுத்தான்.
"ஓய் கல்யாண பொண்ணு. கடைசி வரை பேச்சிலர் பார்ட்டி வைக்காமல் எங்களை ஏமாத்திட்ட நீ..."
YOU ARE READING
காதலும் கடந்து போகும்💘
Romanceகுளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.