அடுத்த நாள் காலை...
கண் விழித்த தாரா... உறங்கிக் கொண்டிருந்த அர்ஜுன் இதழில் ஒரு முத்தத்தைப் பதித்து, அங்கிருந்து எழுந்தாள்.
நேராகச் சென்று தலைக்குக் குளித்தவள், உடை மாற்றி வந்து அர்ஜுனை எழுப்பினாள்.
கண் விழித்த அர்ஜுன்... தாரா கைகளைப் பிடித்து தன்னிடம் இழுக்க, தடுமாறி அவன் மேலயே விழுந்தாள் தாரா. அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான் அவன்.
"டேய் அர்ஜுன் பைத்தியம், என்னை விடு டா. இப்போதான் குளிச்சுட்டு வந்தேன்." என்று அவனைத் தாரா தள்ள...
"அதுக்கு நான் என்னப் பண்ணறது?" என்று அவளைத் தன்னுடன் மேலும் அனைத்துக் கொண்டான் அர்ஜுன்.
"ஷூ! விடு." என்று அவனைத் தள்ளி விட்ட தாரா...
"இன்னைக்கு நாம மண்டபம் போகணும். நாளைக்கு தருண், பிரியா ரிசப்ஷன் கொஞ்சம் எழுந்திரு டா." என்று தாரா கெஞ்சலாகக் கேட்க...
"ஹ்ம்ம்! சரி, நீ இவ்வளவுக் கெஞ்சற நால எழுந்திக்கிறேன்." என்று எழுந்தான் அர்ஜுன்.
"போய் தலைக்குக் குளிச்சுட்டு வா. சரியா?" என்று தாரா கூற...
"சரி!" என்று சொன்னவன், நேராக பாத்ரூம் சென்று குளித்து முடித்து, உடை மாற்றி வந்தான்.அங்கே ஃபேன் அடியில் அமர்ந்து, தன் தலையைக் காயவைத்துக் கொண்டிருந்தாள் தாரா.
அர்ஜுன் வந்ததும் அவனுக்கும் தலை துவட்டி விட்டவள்...
"ஏங்க, கொஞ்சம் ஆடமா உட்காருங்க. தலை துவட்டிட்டு இருக்கேன்'ல?" என்று கூறினாள்."என்னது 'ஏங்க' வா? புதுசா மரியாதையெல்லாம் தர? இப்படிலாம் நீ மதிப்ப'னு தெரிஞ்சிருந்தா இதை என்னைக்கோ நடத்தியிருக்கலாம்." என்று அர்ஜுன் கண்ணடிக்க...
"போடா! பொறுக்கி." என்று அவன் கன்னத்தில் தட்டினாள் தாரா.
அதற்குள் இவர்களின் அறைக் கதவுத் தட்டப் பட்டது.
"கொஞ்சம் நேரம் உங்க வீட்டில் தனியா இருக்க விடமாட்டாங்களே." என்று எழுந்தத் தாரா, கதவைத் திறக்கப் போக.
YOU ARE READING
காதலும் கடந்து போகும்💘
Romanceகுளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.