💙31💙

2.3K 113 48
                                    

"பாரு இதுங்கள. முழிச்சு இருக்கப்ப எலியும், பூனையுமா ரெண்டும் அடிச்சுக்கும். இப்போ எப்படி ஒட்டி இருக்குதுங்க பாரு." என்று நக்கலாகச் சிரித்தான் தருண்.

பின் சீட்டில் முழித்து அமர்ந்திருந்த  நிதீஷ்... "தாரா அக்கா, அர்ஜுன் மேல சாய்ந்ததுக் கூட பரவாயில்லை. ஐஸ், தாரா மேல சாய்ந்து இருக்கா. கொஞ்சம் அதையும் கண்ணைத் திறந்து பாருங்க. இது தான் பெரிய ஹைலைட்." என்று வாயில் கை வைத்து சிரித்தான்.

"அதே தான் நானும் நினைச்சேன்." என்று பிரியாவும் சிரிக்க...

"தருண் அண்ணா, இந்த அரியவகை காட்சி இனிமே நமக்குக் கிடைக்காது. ஒரு ஃபோட்டோ எடுத்து வைங்க. நாளைக்கு இவங்கள கலாய்க்கலாம்." என்று சிரித்தான் நிதிஷ்.

"தூ! இதெல்லாம் ஒரு பொழப்பா டா? அவங்க தூங்கட்டும். டிஸ்டர்ப் பண்ணாத." என்று தருண் துப்ப...

"விடுங்க நானே போட்டோ எடுத்துக்கிறேன். நாளைக்கு இதை வெச்சு அவங்கள ஓட்டலாம்." என்று புகைப்படம் எடுத்தான் நிதீஷ்.

"நாளைக்கு, தாரா உனக்கு சங்கு ஊதப் போறது உறுதி. உயிர பத்திரமா புடிச்சு வெச்சுக்க நித்து." என்று எச்சரித்தான் தருண்.

அடுத்த நாள் காலை...

ஊரில் வந்து இருங்கியவர்கள்... தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசார்ட் ரூமிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்து, தயாராகி வந்தனர்.

முதல் ஆளாக தருணை அழைத்துக்கொண்டு வெளியே வந்த நிதீஷ்...

"தருண் அண்ணா, முதல்ல யூத்தான நாம மட்டும் போயி ஆறு'ல இறங்கி ஜாலி பண்ணலாம். இந்த பெருசுங்க வந்தா, அது பண்ணாத, இது பண்ணாத'னு ரூல்ஸ் போடுவாங்க. இப்போ போனாதான் நீங்களும் பிரியாக் கூட என்ஜாய் பண்ண முடியும்." என்று ஐடியா தந்தான் நிதிஷ்.

"டேய், நித்தி. உனக்கு எந்த நேரத்துல இந்த பேரு வெச்சாங்க'னு தெரியல. ஆனா, நீ யோசிக்கிறது எல்லாம் பார்த்த... சாட்சாத் அந்த மகான் மாதிரியே தான் இருக்கு." என்று நக்கலாகச் சொன்னான் தருண்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now