💜12💜

2.4K 106 16
                                    

"எப்போடா உன் ஆளு அனன்யா'வ எங்க கண்ணுல காட்டுவ? " என்று கேட்டான் தருண்.

"அவ இப்போ இங்க சென்னைல தான் இருக்கா மச்சா... நாங்க ஒன்னா தான் வந்தோம்..." என்று நமட்டு சிரிப்பு சிரித்தான் அர்ஜுன்.

"அடப்பாவி அர்ஜு... என்னடா நடக்குது இங்க? உன் அப்பாவுக்கு விஷயம் தெரியுமா?" என்று விழித்தவனிடம்...

"எங்க லவ் பத்தி சொல்லிட்டு தான் டா அனன்யாவை சென்னைக்கு கூப்டு வந்தேன்... அவ ஃபிரெண்ட் ரேவதி சென்னைல இருக்கா... ஃபிரெண்ட்டை பாக்கணும்ன்னு சொன்னா. சோ, என்கூடவே கூப்பிட்டு வந்துட்டேன்... நாளைக்கு உனக்கும் தாராவுக்கும் அனன்யாவை அறிமுகம் செய்து வைக்கிறேன்." என்றான் அர்ஜுன்.

"ஓகே டா... பார்ப்போம் உன் செலக்சன் எப்படின்னு... அதுசரி நைட் எங்க தங்கப்போறீங்க ரெண்டு பேரும்? "

"இல்லடா, உனக்கே தெரியும். எங்க வீடு ஜாயின் ஃபேமிலி. அப்பா, அம்மாக்கு மட்டும் தான் எங்க லவ் விஷயம் இப்போதைக்கு தெரியும். மத்தவங்க யாருகிட்டயும் இன்னும் சொல்லல. அங்க பெரியப்பா, பெரியம்மாலாம் இருக்காங்க. ஒரு வயசுப்பொண்ண கூட்டிட்டு போனா எதாச்சும் சொல்லுவாங்க. அதில்லாம என் ரெண்டாவது அத்தை, அவங்க பொண்ணை எனக்கு கட்டி வைக்கணும் ஆசைல இருக்காங்க. அதான், இந்த சூழ்நிலையில அங்க போக வேண்டாம்னு அனன்யாவோட தோழி ரேவதி வீட்டுல இன்னைக்கு நைட் தங்குகிறோம்."

"ரேவதி வீட்'ல அம்மா, அப்பாலாம் ஏதும் சொல்ல மாட்டாங்களா? இப்படி நீங்க ரெண்டு பேரும் ஜோடியா போனீங்கன்னா..." என்று தன் சந்தேகத்தை கேட்டான் தருண்.

"அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. அவங்க எனக்கு ஒரு வகையில சொந்தம் தான். அம்மா நேத்தே அவங்ககிட்ட கால் பண்ணி விஷயத்தை பேசிட்டாங்க... சோ எந்த ப்ராப்ளமும் இல்ல."

"சொந்தமா...? எனக்கு தெரியாம யாருடா அந்த ஃபேமிலி? "

"என் அம்மாவோட தூரத்து சொந்தம் டா... ரேவதி எனக்கு ஒரு வகைல தங்கச்சி முறை... அவ கல்யாணத்துக்கு போனப்ப தான் அனன்யாவை பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது... பட், பேச தைரியம் இல்ல... கல்யாணம் முடிஞ்சதும் மனசே இல்லாம வீட்டுக்கு வந்துட்டேன்."
"அப்பறம் என்ன ஆச்சு?" என்று தருண் ஆர்வமாக கேட்க...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now