"நல்லா சமாளிக்கிறடா தருண். யாரு அந்த மஞ்சள் சாரி கட்டிருக்க பொண்ணு?.... நீ கேட்டா பதில் சொல்ல மாட்ட. நான் அந்த பொண்ணுகிட்டயே கேட்டுக்கறேன்." என்ற தாரா...நேராக பிரியாவின் திசையில் திரும்பி. "அண்ணி அண்ணி..." என்று சத்தமாக அழைத்தாள்.
இவள் செய்கையில் திடுக்கிட்ட தருண்... "தாயே, உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன். அந்த பொண்ணு எனக்கு வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தான். அவளுக்கு இன்னைக்கு பர்த்டே. இப்பதான் முதல் முறையா வெளிய வந்திருக்கோம். நீ மட்டும் இப்போ அமைதியா இருந்தா, உனக்கு அஞ்சு டிரஸ் வாங்கித்தறேன்." என்று தாராவிடம் கெஞ்சி பேரம் பேசினான்.
"உண்மையா வாங்கித்தருவியா?" என்று தருணை சந்தேகமாகப்பார்த்தாள் தாரா.
"சத்தியமா வாங்கி தரேன் டி." என்று தாராவின் கைகளில் அடித்து சத்தியம் செய்தான் அவன்."
"அப்ப ஓகே." என்று பல்லைக்காண்பித்து தாரா சிரிக்க...
"அய்ய, ரொம்ப இளிக்காத டி. பல்லு கீழ கொட்டிட போகுது. ஆமா, உங்க அத்தைக்கூட தானே கோவிலுக்கு போறேன்னு சொன்ன. எங்க அவங்கள காணோம்?" என்று நாலாபக்கமும் மைதிலியை தேடினான் தருண்.
"இதோ அந்த பிரஹாரத்தை சுத்திட்டு வறேன்'னு சொன்னாங்க..." என்று தாரா சொல்லி கொண்டிருக்கும் போதே, இவர்களை நோக்கி வந்தாள் மைதிலி...
மைதிலியை பார்த்ததும் "ஹாய் ஆன்ட்டி" என்று கையசைத்தான் தருண்.
"ஆன்ட்டி'னு கூப்பிடாத அத்தை'னு கூப்பிடு தருண். இதை உன்கிட்ட எவ்வளவு தடவை டா சொல்றது?" என்று உதட்டை வளைத்தாள் மைதிலி.
"ஓகே அத்தை..." என்று புன்னகைத்தவன்... "அர்ஜுன் வரலையா?" என்று கேட்டான்.
"இல்ல தருண், காலை'ல கோவிலுக்கு போகலாம் என்று கூப்பிட்டதுக்கு நீயும் வரலைன்னு சொல்லிட்ட, அர்ஜுனும் வரலைன்னு சொல்லிட்டான்." என்ற மைதிலி, மேலும் பேச்சை தொடர்ந்தாள்...
" அது இருக்கட்டும். நீ என்னடா பண்ணிட்டு இருக்க இங்க?"
YOU ARE READING
காதலும் கடந்து போகும்💘
Romanceகுளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.