💜32💜

2.2K 109 21
                                    

'இவன் வேற எதுக்கோ பிளான் பண்ணற மாதிரி இருக்கு. இவன் மட்டும் ஜாலியா இருப்பானா? இந்த ஃபிராடை விடக் கூடாது.' என்று ஒரே மாதிரி மைண்ட் வாய்சில் நினைத்த அர்ஜுனும், தாராவும் ஓடிச் சென்று...
மீண்டும் பிரியா மேல் இடறி விழப்போன தருணைத் தாங்கிப் பிடித்தனர்.

"இதுல மட்டும் ஒற்றுமையா இருங்க"... என்று இருவரையும் முறைத்தான் தருண்.

தருணின் காதருகில் வந்த அர்ஜுன்... "நீ மட்டும் என்ஜாய் பண்ணுவ. நாங்க ஓரமா நின்னு வெங்கயாம் உரிக்கணுமா?"

"இப்போ ஏன்டா நீ சம்பந்தம் இல்லாம பேசற? " என்று புரியாமல் அர்ஜுனைப் பார்த்தான் தருண்.

"அப்படிதான் டா பேசுவேன். எனக்கு வயிறு எரியுது. தூ, நீயெல்லாம் ஒரு நண்பனா? இரு உன்னை உங்க அப்பா கிட்டச் சொல்லித்தறேன்." என்று அர்ஜுன் கூறிக் கொண்டிருக்கும் போது...

"தூ, நீயெல்லாம் ஒரு அண்ணா'வா? இரு, உன் லட்சணத்தை அப்பாக் கிட்ட சொல்றேன்." என்று இடுப்பில் கை வைத்துப் பார்த்தாள் தாரா.

"என்னடி ரெண்டுப் பேரும் ஒரே மாதிரி பேசறீங்க? ஓடி போயிருங்க." என்றவன், இரண்டுப் பேர் தலையிலும் ஒரு கொட்டு வைத்து விட்டு... பிரியாவிடம் நடந்துச் சென்றான்.

அதே சமையம் அங்கு வந்து சேர்ந்தார்கள்... அர்ஜுனின் அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அவனின் இரண்டு மாமாக்கள், அத்தைகள், அவன் அண்ணா, அண்ணி, அக்கா, மாமா மற்றும் சுட்டீஸ் சஞ்சனா மற்றும் சச்சின்.

"மொத்தம் இருபத்தி ரெண்டு பேரு சரியா இருக்கீங்களா'னு பார்த்திக்கோங்க. யாரும் மிஸ் ஆகளையே?"... என்று கேட்டுக்கொண்டு, ஆற்றங்கரையில் நின்றார் பெரியப்பா ரத்தினகுமார்.

"எல்லாம் சரியா இருக்காங்க." என்று ராஜ்குமார் கூற... இவர்கள் அனைவரும்  தண்ணீரில் இறங்கினார்கள்.

அர்ஜுன் ஓடிச் சென்று சச்சின் மற்றும் சஞ்சுவை தூக்கிக் கொண்டு, மீண்டும் தண்ணீரில் இறங்கினான்.

தண்ணீருக்குள்ளே இறங்கிய ராஜ்... "என்ன தருண், இப்படி நினைந்து போயிருக்க. ஆறு'ன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?" என்றவர் பிரியாவிடம் திரும்பி...
"என்னமா நீயும் தண்ணிய பார்த்ததும் உற்சாகம் ஆகிட்டயா?" என்று சிரித்தார்

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now