💙35💙

2.2K 110 29
                                    

அர்ஜுன் வேகமாக தன் ரூம் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த தாரா... தன் ஈரமானத் தலையை ஒரு துண்டினால் துவட்டிக் கொண்டே "ம்ச்! இப்படிதான் கதவைத் தட்டுவையா? கதவே உடைஞ்சுடும் போல இருக்கு. ஹோட்டல் காரன் மட்டும் இதைப் பார்த்திருந்தா... உனக்கு ஃபைன் போட்டு இருப்பான்."

அவளை மேலும், கீழுமாக பார்த்தவன். எதுவும் பேசாமல்... ஈர உடையோடு வந்து மெத்தையில் அமர்ந்தான்.

"பெட் ஈரமாகுது. நைட் எப்படித் தூங்கறது? முதல்ல எழுத்துரு." என்று கண்களை உருட்டினாள் தாரா.

அவளை முறைத்தவன்... "எல்லாம் எங்களுக்குத் தெரியும்"... என்று எழுந்து பாத்ரூம் சென்று, குளித்து, உடை மாற்றி வந்து... 'உம்' என்று அமர்ந்து இருந்தான்.

தாரா, மனசுக் கேட்காமல்... "ஐ ஆம் சாரி. நான் அனன்யாவை இழுத்திருக்கக் கூடாது." என்றாள்.

அவளை கோபமாகப் பார்த்தவன், எதுவும் பேசாமல், வேறுப் புறம் திரும்பி அமர்ந்தான்.

'இந்த அசிங்கம் எனக்குத் தேவை தான். பெரியப் பருப்பு இவன். ஓவரா தான் சீன் போடறான். இனிமே இவங்கிட்டா பேசவேக் கூடாது.' என்று முடிவெடுத்தாள் தாரா.

அதே சமயம்.. தாராவின் தொலைப்பேசி ஒலிக்க... அதை எடுத்து காதில் வைத்தாள்.

"ஹலோ பிரசன்." என்று இவள் பேச...

'இவன் அந்த டாக்டர் தான? இவன் எதுக்கு இவளுக்குக் கால் பண்ணறாண்? என்று அவள் பேசுவதை ஒட்டுக் கேட்க, காதைத் திறந்து வைத்தான் அர்ஜுன்.

'ஓகே பிரசான். நான் லீவ்'ல இருக்கேன். பிளீஸ் டா. எனக்காக அந்த பேஷன்ட் அப்பாயின்ட்மெண்ட் நீ பார்த்துக்கோ.'

'என்னடா இப்படி சொல்லற? அஞ்சு நிமிஷம் தான் ஆகும். பிளீஸ்,... பார்த்துக்கோ.'

'தாங்க்ஸ்.'

'யாரு அர்ஜுன்'ஆ? இங்க தான் இருக்கான்.'

'கிளிப்பான். அவன் சரியான சிடு மூஞ்சி.'

'ஓகே நான் அப்பறம் பேசறேன். பை.'

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now