💙21💙

2.3K 115 37
                                    

"எங்க ஓடுற? எங்களையே மாட்டி விடலாம்'னு பார்க்கிறாயா?"  என்று தருண், வேகமாக இவர்களின் அறைக்கதவை சாவிக்கொண்டு பூட்டின்னான்.

"ஓய் ராக்கு, எங்களை மீறி உன்னால வெளிய போக முடியாது. வந்து உட்க்காரு வா.." என்று தாரா நாக்கை நீட்டி பளிப்பு காட்ட...

வேறு வழியின்றி அர்ஜுனின் அருகில் அமர்ந்தாள். அவளின் மற்றொரு புறம் வந்தமர்ந்த தருணை கண்களால் மிரட்டினாள் ஐஸ்யங்கா..

"என்ன லுக்கு? கண்ணுக்குள்ள விரல விட்டு ஆட்டிருவேன் ஜாக்கிரதை." என்று சிரித்தான் தருண்.

இதனால் டென்ஷனான ஐஸ்யங்கா, தருணின் கையைப்பிடித்து கடித்து, அவன் கையிலிருந்த சாவியைப்பிடிங்கி, அர்ஜுனிடன் தந்தாள்.

"அர்ஜுன் மாமா, சீக்கிரம் எனக்கு இந்த கதவத்திறந்து விடு. நாம தாராவை அம்மாக்கிட்ட மாட்டி விடலாம்..." என்று ஐஸ் கூற...

"சூப்பர் பிளான் ஐஸ். இதோ மாமா வறேன்டா... இந்த தாராவ இன்னைக்கு ஒரு வழி பண்ணிடலாம்." என்று தாராவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஐஸ்சின் கையில் இருந்து சாவியை வாங்கியவன், ... "வேணுமா டி?" என்று தாராவின் எதிரே வந்து நின்றுக்கொண்டு, சாவியை அவள் கண் முன்னே ஆட்டினான்.

"அர்ஜுன் ஒழுங்கா சாவிய குடு." என்று அவனிடம் இருந்து  சாவியை வாங்க வேகமாக எழுந்த தாரா, அவனை நோக்கி நடக்க முற்படும் போது...

தாராவை தடுக்கி விழ வைக்க பிளான் போட்ட ஐஸ்யங்கா, தன் காலை நடுவே நீட்டினாள்.

ஐஸ்சின் காலில் தடுக்கிய தாரா, அவள் முன்னே நின்றுக்கொண்டிருந்த அர்ஜுன் மேல் 'தடால்' என்று விழுந்தாள். இவள் விழுந்த வேகத்தில் சமநிலையின்றி... அர்ஜுன், தாரா இருவரும் சேர்ந்து தரையில் விழுந்தனர்.

ஒரு நிமிடம் அறை முழுவதும் நிசப்தம் பரவியது.

அர்ஜுனின் இதயமோ படபடவென்று துடித்தது. தன் முகத்தில் விழுந்திருந்த தாராவின் கூந்தலை எடுத்து, அவள் காதின் பின்னே சொருகினான் அர்ஜூன்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now