💜28💜

2.3K 106 30
                                    

அடுத்த நாள் காலை...

அர்ஜுன் எழுந்து பார்த்தப் பொழுது அருகில் தாராவைக் காணவில்லை.

மெத்தையில் இருந்து எழுந்தவன்,  தயாராகி கீழேச் சென்றான்.

அங்கே, ஊருக்குப் போக குடும்பத்தில் உள்ள அனைவரும் தயாராக இருந்தனர். அங்கும், இங்கும் சுற்றிப் பார்த்தும் தாரா எங்கும் இல்லை.

"அம்மா, தாரா எங்க?" என்று கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மைதிலியிடம் கேட்டான் அர்ஜுன்.

"ஏன்டா, வந்ததும் வராததுமா உன் பொண்டாட்டிய தேடற? அவ உன்கிட்ட சொல்லலையா?" என்றாள் அடுப்பில் தோசை ஊற்றிக்கொண்டு.

"ம்ம்ச்! சொல்ல'ல மா. எங்க அவ?"

"அவ முக்கியமான வேலை இருக்குன்'னு ஹாஸ்பிடல் கிளம்பி போயிட்டா." என்று மைதிலி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே... இவர்களின் வீட்டினுள் நுழைந்தான் தருண்.

"டேய் மச்சான், நீ என்னடா பண்ணற இங்க?" என்று ஆச்சரியமாக கேட்டான் அர்ஜுன்.

"ஃபேமிலி டூர் நானும் தான் போறேன்."

"அடப்பாவி. நீயுமா? என்று விழித்த அர்ஜுன்... "மாமா வராலயா?" என்று கேட்டான்.

"இல்ல, அப்பாவுக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொன்னாரு. எங்க ஃபேமிலி சார்பா நானும், பிரியாவும் வறோம்." என்று சிரித்தான்.

"என்னது பிரியாவா? என்னடா ரெண்டு பேரும் லவ் பண்ணறீங்களா?" என்று ஆச்சரியமாகக் கேட்டான் அர்ஜுன்.

"இல்ல டா. அவக்கிட்ட இன்னும் என் காதலை சொல்ல'ல. கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன்." என்று தருண் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே... தருணின் தொலைப்பேசி சினுங்கியது...

"அர்ஜு, தாரா தான் ஃபோன் பண்ணறா." என்று கூறி தொலைப்பேசியை எடுத்துப் பேசினான்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now