[19/02, 22:00] My Wife: ❤மீண்டும் வருவேன் ❤71
🌹இதுவும் காதல் தான் 🌹275
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤((கிராமத்து அழகனை அவனது நண்பன் வாசுதேவன் புழல் ஜெயிலில் சந்திக்கும் காட்சி.....))
அழகன் : டேய் வாசு அப்போ என் உயிரான என் அழகி எனக்காக காத்து இருப்பாளா .....அப்படி அவள் உயிரோடு இருந்தால் ஏன் என்னை வந்து பாக்கல ....எனக்கு ஒண்ணுமே புரியல ..அப்போ அன்னைக்கு என் கனவில் வந்த மாதிரி அவள் எங்காவது மாட்டிகிட்டு இருக்காளா ..ஒருவேளை அந்த தேவகோட்டை தீ விபத்துல நான் இறந்துட்டேன்னு அவ நினைத்து இருப்பாளோ ...அப்போ என்னோட இன்னொரு பிள்ளை ....ஆமா அப்போ எனக்கு ஆண் பிள்ளை தான் பிறந்து இருப்பான் ....அவன் என் அழகியை பாத்துப்பான் ...நான் அவகிட்ட சொல்லியிருக்கேன் ...நான் இல்லையென்றாலும் என் மகன் உன்னை பத்துப்ப்பான்னு நான் சொல்லியிருக்கேன் ...டேய் வாசு என் மகள்களை நான் பாக்கணும் ...ஐயோ இல்ல வேணாம் அவுங்க உயிரோடு இருப்பது தெரிந்தா இந்த கேஸை மறுபடியும் தூசி தட்டுவாங்க ...வேணா எதுவும் வேணாம் டா...நான் இப்படியே இருந்து இங்கேயே என் உயிரை விட்டுடுறேன் ..
வாசு : டேய் ....இங்க பாரு டா உன்னுடைய மூன்று பெண் குழந்தைகளும் அப்படியே உன் அழகியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பதை பாருடா .......டேய் அழகா இனியாவது உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் யோசிச்சு முடிவெடு ......உன் காதல் உண்மையானது தான் உன்னுடைய அழகி நீ இப்போ சொன்ன மாதிரியே உன் இன்னொரு உயிரோடு இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உனக்காக காத்துக் கொண்டுதான் இருப்பா....நீ தயவு செய்து உன்னுடைய இந்த வனவாசத்தில் இருந்து வெளியே வா உன்னை மீட்பதற்கு எந்த ராமனும் வரப்போவது இல்லை..
((என்று சொன்னபடி கதிரழகனின் நண்பன் ஜெயிலர் வாசுதேவன் அந்த இடத்தை விட்டு நகர..... இந்த காட்சியினை கண்ட இரண்டு கண்களுக்கு சொந்தக்காரர் ஆன ஒருவன்.... தன் கைபேசி வாயிலாக மற்றும் ஒருவரை அழைக்க.... அந்த அழைப்பை எடுத்து பேசியது ஒரு பெண் ....))
பெண் : ஹலோ என்ன இந்த நேரத்துல ஏதாவது முக்கியமான விஷயமா
ஒருவன் : ஆமா மேடம் இந்த சிறைக்கு புதுசா வாசுதேவன் அப்படி என்ற ஒரு ஜெயிலர் போஸ்டிங் ஆகி வந்து இருக்காரு
![](https://img.wattpad.com/cover/270854955-288-k450687.jpg)
YOU ARE READING
🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )
Fanfictionஇதுவும் காதல் தான் கதையின் தொடர்ந்து அழகனின் அழகி இவளின் கதையுடன் சேர்த்து இரண்டாம் தலை முறை பிள்ளைகளை வைத்து எழுதும் கதை....