come back முல்லை டார்லிங்

163 23 18
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 26

K - ஏன் டா... நம்ம வேணும்னா அவ கிட்ட போய் பேசலாமா

வேணு - ஆமா அண்ணா... ஒரு சில விஷயம் எல்லாம் பேசினா தானே புரியும்.... வாங்க போகலாம்..

கதிரும் வேணுவும் முல்லை அறைக்குள் செல்ல.... அங்கே அன்னம் கட்டிலில் படுத்து இருந்தவர்... இவர்களை பார்த்ததும் எழுந்து அமர....

வேணு - அத்த முல்லை எங்க

அன்னம் - அவ இப்போ தான் வெக்கையா இருக்குனு குளிக்க போனா...

K -------

அன்னம் - ஏன் என்ன விஷயம்...

K - இல்லிங்க.... இந்த கல்யாணத்துல முல்லைக்கு விருப்பமான்னு கேட்டீங்களா

அன்னம் - என்னப்பா கேக்குற நீ.... எனக்கு புரியல...

வேணு - அத்த.... நீ பாத்தியா...அந்த ஆகாஷ் வந்ததுல இருந்து முல்லை முகமே சரியில்ல...

அன்னம் - டேய்... அவளுக்கு ஒரு நல்லது நடக்கும் போது அவ அவங்க அம்மா இல்லை என்ற கவலையில இருப்பா டா...

K - இல்லிங்க... எனக்கென்னவோ முல்லைக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு தோணுது... எதுக்கும் நம்ம அவகிட்ட அவ சம்மதத்தையும் கேட்டு மேற்கொண்டு இந்த கல்யாணத்தை நடத்தலாமான்னு யோசிக்கலாம் இல்ல

அன்னம் - இருப்பா இருப்பா.. என்ன தம்பி சுத்தம் விவரம் இல்லாத ஆளாய் இருக்க நீ...இங்க பாரு அவ சின்ன பொண்ணு...அவளுக்கு அவங்க அம்மா நல்லது தான் பண்ணுவா... அவங்க அம்மா பார்த்த மாப்பிள்ளை தான் ஆகாஷ்....அவ சம்மதத்தோடு தானே அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கொடுக்க வள்ளி எல்லா ஏற்பாடையும் பண்ணா... அதனால இப்ப புதுசா அவகிட்ட நீ சம்மதம் கேக்கணும்னு ஒண்ணுமே இல்ல பா...அது மட்டும் இல்லாம சொல்றேன்னு கோச்சிக்காத.. நீ முல்லையை பத்தி கவலைப்படாதே, அவள் விஷயத்தை பார்க்க அவங்க அப்பா இருக்காரு

வேணு - என்ன அத்த நீ... சுத்த புத்தி இல்லாம பேசிக்கிட்டு இருக்க.. கதிர் அண்ணன் தானே முல்லைக்கு தேவையான நகை, கார் ,வீடுன்னு எல்லாத்தையும் கொடுக்க சம்மதிச்சிருக்கு....அப்போ கதிர் அண்ணன் பேசாம வேற யாரு பேசுவாங்க

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now