💛காதல் கொண்டேன்💙

172 29 8
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 28

K - hei வாயாடி..... நான்.....
நான் உன்னை காதலிக்கிறேன் டி........
நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்.....
நீ என் காதலை ஏத்துப்பியா...

என கதிர் தன் காதலை முல்லையிடம் தெரிய படுத்திய அடுத்த நொடி..... முல்லை தன் வசம் இருந்து கோவமாக அவனை தள்ளிவிடவர்.....அருகில் இருந்த டேபிள் மேல் இருக்கும் பூஜாடியை கொண்டு கதிரை தாக்க.....
கதிரின் நெற்றியில் இருந்து வெளி வந்த ரத்தத்தை பார்த்த முல்லை...

M - முதல்ல இங்க இருந்து வெளியே போ.... இல்லைனா உன்னை என் கையாள அடிச்சு மண்டையை உடைச்சிடுவேன்...

என கத்திய முல்லையின் குரலை கேட்டு அவள் ரூம் கதவை திறந்து கொண்டு
கதிர் தயங்கியப்படி முல்லையின் ரூமுக்குள் வந்தவர்.... கட்டிலில் படுத்து கனவில் கோவமாக தானாக கத்தி கொண்டு இருக்கும் முல்லையை எழுப்ப...

K - முல்ல.....
முல்ல....

முல்லை கண்களை திறக்காமல்.... கோவமாக..... கதிரின் சட்டையை பிடித்து...

M - உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வேற ஒருத்தி கூட நிச்சியம் பண்ணிட்டு
என்னை காதலிக்கிறேன்னு சொல்லுவ.... சொன்னது மட்டும் இல்லாமல் எனக்கு முத்தம் வேற தருவியா நீ... உன்ன என்ன பண்றேன் பாரு நான்.......

என முல்லை கோவமாக கண்கள் மூடிக்கொண்டு கத்தியவளின் தோள்களை குலுக்கிய கதிர்...

K - முல்ல..... என்னாச்சு முல்ல.... ஏய் இங்க பாரு... என்னாச்சுன்னு கேக்குறேன் இல்ல....

என கதிர் முல்லையை கேள்வி கேக்க....முல்லை அதே கோபத்துடன் கண்களை திறந்தவர்.... மீண்டும் கதிரின் சட்டையை பிடித்து

M - ஏன் டா எனக்கு முத்தம் தந்த.... உனக்கு அசிங்கமா இல்ல... உனக்கு தான் எமிலி கூட கல்யாணம் ஆகப்போகுது இல்ல....எவ்ளோ கொழுப்பு இருந்தா நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்லுவ...

என முல்லை கேக்கும் கேள்வியில் அவள் கண்ட கனவின் ப்ரெதிபலிப்பு தான் இது என்று உணர்ந்து கதிர்.... தனக்குள் சிரித்து கொண்டே ... பொறுமையாக அவள் காரங்களை தன் சட்டையில் இருந்து விடுவித்தவன்....

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now