💙உனக்காக💛காத்திருப்பேன்💙

199 26 14
                                    

💙அன்பே💛சிவம்💙

💞Episode 39

After One Week....
கதிரின் பங்களா முழுவதும் மயில் சாமியின் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ்ந்து இருந்தனர்.....

மாறன் - மகி மா...

மகி - என்ன மாமா....

மாறன் - கல்யாண ஜோடிங்களுக்கு மாலை எல்லாம் ரெடியா இருக்கா...

மகி - வேணு எல்லாத்தையும் மனமேடையில எடுத்துட்டு வந்து வச்சிட்டான் மாமா...

மாறன் - எங்க உன்னை பெத்த பத்திர மாசத்து தங்கம்...

கீதா - என்ன மாப்பிள்ள.... என்னை ஏன் தேடுறீங்க...

மாறன் - உங்க தொல்லை தாங்காம ஓடிப்போன உங்க புருஷன் பழனியை தான் நீங்க தேடுறது இல்ல...உங்களை நானாவது தேடுறேன்னு சந்தோஷப்பட்டுகோங்க மாமியாரே..

கீதா - ஐயோ மாப்பிள்ள... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.. நான் உங்களுக்கு என் அருமை மகளை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன். அதனால நீங்க என்ன பேசினாலும் நான் உங்க மேல மரியாதையும் மதிப்பும் வச்சிருக்கேன்

மாறன் -😍

கீதா - அப்படியெல்லாம் பேச நான் ஒன்னும் சீரியல் மாமியார் இல்லை புரியுதா...இங்க பாருடி மகி...அடுத்து உன் புருஷன் ஓவரா பேசினா குல்பி ல எலி பாய்சன் கலந்து கொடுத்துடு.. வாயே வராமல் இழுத்துட்டு போகட்டும்

மாறன் - கொலைகார குடும்பமா இருக்கும் போல

மகி - மாமா கொஞ்ச நேரம் சும்மா இரு

மாறன் - அடியே நீ முதலில் வசனத்தை மாத்து...சும்மா இரு சும்மா இருன்னு பாட்டு பாடுற...நான் சும்மாவே இருந்திருந்தால் ஆறு பிள்ளைக்கு நீ அம்மாவா ஆகி இருக்க முடியுமா..

கீதா - ஆமா பெரிய ஆறு புள்ள பெத்துட்ட.....எங்க வீட்டு முனையில் கூட தான் ஒரு நாய் ஒன்பது குட்டி போட்டு இருக்கு...அதுக்குன்னு அதை கூப்பிட்டு வைத்து அவார்ட்டா கொடுக்க முடியும்

மாறன் - மாமியாரே அப்ப என்ன நாயுனு சொல்றிங்களா....

கீதா - அந்த நன்றியுள்ள ஜீவன் கூட உங்கள எல்லாம் ஒப்பிட முடியாது....சரி சரி முகூர்த்த நேரம் வரப்போகுது... போய் பொண்ணு மாப்பிள்ளை ரெடி ஆகிட்டாங்களா பாரு...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now