இரு மேகம் உரசியதில்
ஒலியும் ஒளியும் பிறந்ததுஇதோ - ஒளியாய் தாயும்
ஒலியாய் தந்தையும்...ஏனோ ஒளியாய் பிறந்ததாலே
முதலில் என் விழித் தொட்டது
தாயின் அன்பும் பாசமும்...ஒலியாய் பிறந்ததாலோ என்னவோ
ஒளிக்கு முன்பே ஒலியை
கேட்க முடியவில்லை...பின்னர் தான் கேட்டேன்
அவ்வொலி எத்தனை
சுக துக்கங்களை என்னிடம்
ஒழித்து வைத்துள்ளது என்று...ஒலியாகப் பிறந்ததால்- நீயோ
என் செவியில் ஓயாது
ஒலிக்கிறாய், நீ இல்லாத போதும்...