-3-

1.3K 41 1
                                    

அந்தவார விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது தன் நண்பர்களை சந்திக்க சென்றிருந்தான் ரய்யான்.

அந்த நேரம் பார்த்து ஷிரீனின் எண்ணில் இருந்து அழைப்பு வர இருக்கும் இடத்தை மறந்து ஆர்வமாக எடுத்துப் பேசினான்.

"அஸ்ஸலாமு அலைக்கும்" முதலில் அவனே ஸலாம் சொல்ல

அவளது தேன் குரலில்
"வலைக்கும் ஸலாம்" என பதில் வந்தது. 

"இப் யூ டோண்ட் மைன்ட் ஒரு பேவர் செய்வீங்களா? " என தயக்கத்துடன் கேட்க

"இட்ஸ் மை ப்ளெஷர் டு டூ எனிதிங் போர் யூ.. என்னண்டு சொல்லுங்க ஷிரீன்.."

"அம்ம்.. எனக்கு கொஞ்சம் பெட்டா வரைக்கும் போகனும்.. ரூமிஸ் எல்லாரும் ஊருக்கு போயிடாங்க.. ஸோ நீங்க ப்ரீஆ இருந்தா.." என இழுக்க

"ஓ ரியலி! நானும் நேத்து நைட் தான் கெண்டிக்கு வந்தேன்..
வெரி ஸொரி ஷிரீன்..." அவளிடம் வருத்தம் தெரிவிக்க

"ஓஹ்! இட்ஸ் ஓல் ரைட்! மை பேட் லக்... ஐல் மெனேஜ்.. எனிவே தான்க்ஸ் ரய்யான்" சோர்ந்த குரலில் சொன்னாள். அவன் மனமோ 'பேட் லக் உனக்கில்லமா எனக்கு தான்.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டேனே' என வருந்தியது.

அவன் அழைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்த போது இரு சோடிக் கண்கள் அவனை முறைத்து பார்த்திருக்க

"என்னடா.. எதுக்காக ரெண்டு பேரும் இப்படி முறைக்கிறீங்க ?"

"ஓஹ்! அப்போ எதுக்கு முறைக்கிறோம்னு உனக்கு தெரியாது.. ம்ம்ம் நம்பிட்டோம் டா.." என நாசிர் ரய்யானை நக்கலாய் கேட்க

"ம்ஹூம்.. தெரியாது " என அவன் தோளை குலுக்க

"ஆஹான்! நீங்க நல்லா ட்ரை பண்றீங்க தம்பி பட் உங்களுக்கு ஸெட் ஆகல.. ஸோ உண்மைய சொல்லிருங்க.." நாசிர் ரய்யானை விடாமல் குடைய

"எந்த உண்மை! எனக்கு புரியல.." என்ற ரய்யானின் தோளை இருக்கிய நாசிர்

"அப்படியா ராஜா! இப்ப ஒரு கேர்ள் பேசிச்சே அதப்பத்தி.."

"டேய் ரூம்மெட் ஒருத்தன் "

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now