-10-

826 39 0
                                    

சுலைஹாவும் இரண்டு பெண்பிள்ளைகளின் அன்னை. எனவே சபியாவின் செய்தி அவரை யோசனையில் ஆழ்த்தியது.

"ஏன் அவங்க சபியாவ வேணாம்னுட்டாங்க? "

"மாப்பிள்ளைக்கு ஒல்லியான புள்ளதான் வேணுமாம். அதனால வேணானுட்டாராம் "

"ஏன் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வரல்லயோ? அவருக்கு விருப்பம் இல்லாட்டி எதுக்கு சரின்னு சொல்லனும்?"

"அதெல்லாம் வந்துபார்த்துட்டு வடை, ரோல்ஸ், கட்லட்னு எல்லாத்தயும் நல்லா முழுங்கிட்டுபோய்
பொண்ண பிடிச்சிருக்குனு சொல்லி நம்பிக்கை குடுத்துட்டு. சபியா வீட்டில சந்தோஷமா கலியாணத்துக்கு ரெடியாகிட்டு இருக்குறப்ப போனவீக் மாப்பிள்ளையோட வாப்பா புரோக்கரையும் கூட்டிட்டுவந்து பொண்ணு கொஞ்சம் குண்டாயிருக்கு, கலரும் குறைவு அதனால மகனுக்கு கொஞ்சம் விருப்பமில்லாத மாதிரி.
அப்படியே இந்தகலியாணம் நடக்கனுமுன்னா அஞ்சி லட்சம் காசு தரவேணும்னு டீசன்ட் பிச்சை கேட்டிருக்காரு..!"

"எல்லாம் ஏதோவொரு நல்லதுக்குத்தான். இப்பவே அவங்க குணம் தெரிஞ்சிருச்சே. பின்னாடி டிவோர்ஸ் அதிதுன்னு சீரழியாம அள்ளாஹ்தஆலா இத்தோட பாதுகாத்துட்டானே. ஆனாலும் பாவம் அவங்களுக்கு எவ்வளவு கவலையா இருக்கும். அள்ளாஹ்தான் அவங்களுக்கு பொறுமைய குடுக்கனும்" வருத்தத்தோடு சுலைஹா கூற

"ஏன்மா இந்த சமுதாயம் இப்படி இருக்கு. எல்லோருமே அழகுக்கும் வெள்ளைத் தோளுக்குமே அலையுறாங்க யாருமே மார்க்கப் பற்றையோ, குணத்தையோ பார்க்குறதில்ல. அப்ப வெள்ளையா ஒல்லியான அழகான வசதியா உள்ள புள்ளைகளுக்கு மட்டுந்தான் இந்த உலகத்துல கலியாணம் நடக்கனுமா?! மத்தவங்களை அள்ளாஹ் சும்மா படைச்சானா?!!" சமுதாயத்தின் மேல் கோபமும் வெறுப்பும் மேலோங்க அதை வார்த்தைகளில் காட்டினாள் ஹிக்மா.

"அப்படியில்ல ஹிக்மா! அள்ளாஹுத்தாலா எல்லாரையும் ஜோடியாத்தான் படைச்சிருக்கான். அந்தந்த ஜோடி சந்திக்கும்போது இந்த கறுப்பு வெள்ளை; உயரம் குட்டை; கொழுப்ப மெலிவு; வசதி வசதியில்ல.. எந்தக் காரணமும் அவங்கள தடுக்காது. அவங்க ரெண்டு பேருந்தான் சேரனும்னு எழுத்து இருந்தா அள்ளாஹ் விதிச்ச நேரத்துல அது நடக்கும் "

நேற்று இல்லாத மாற்றம் |Completed|On viuen les histories. Descobreix ara