51.அத்தியாயம்

353 15 2
                                    

முதலமைச்சர் வீட்டில் அவரது எழுபத்தி இரண்டு வயதை முன்னிட்டு ரத சாந்தி வைபவம் நடக்கவுள்ளது!

இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், ஆங்காங்க சென்றுவிட்ட பேரன், பேத்தி, மருமகள் என ஒன்றாக திரண்டு வந்தனர் அவ்விசேடத்தில் கலந்துக்கொள்ள!

முதல் ஆளாக, வெற்றிச்செல்வன், வெண்மதி மற்றும் மதிவதனியோடு வந்திறங்கியது நமது பாசத்துக்கும் நேசத்திற்கும் உரிய ஒளிர்மதியே தான்!

வெக்கையில் இருந்தவனுக்கு 'ஹிமாலயா கூல் பவுடர்' கிடைத்தது போல், அவளை கண்டதும் அனைவரது மனமும் குளிர்ந்துப்போனது!

ஒளிர்மதிக்கு அவர்களோடு தினமும் அலைப்பேசி மூலம் பேசுவதால் கொஞ்சம் மனம் ஆறுதலாகினாலும், நேரில் கண்டதும் அவளது கண்களுமே கலங்கித்தான் போனது.

அதிலும் சங்கீதா தான் பெறாத மகளுக்கான ஏக்கத்தை கண்களில் தேக்கி, அவளை காண்பதை கண்டு மதிவதனியே வியந்து நெகிழ்ந்தார்.

ஒளிர்மதி எவ்வித தயக்கமும் இன்றி முன்னே அடி வைக்க, மதிவதனி கைகளை இறுக பற்றிக்கொண்டவனாக வெற்றிச்செல்வன் ஒருபுறமும், வெண்மதி ஒருபுறமும் நிற்க,  மதிவதனியும் அவர்களோடு உள்ளே வர மனமின்றி நின்றிருந்தனர்.

அதுவரை நடப்பதை பார்வையாளராக பார்த்திருந்த முதலமைச்சர், அவர்கள் முன் வந்து, தனது தப்பை உணர்ந்ததற்கு சாட்சியாக மூவரது கைப்பற்றி கண்ணீரோடு அவர்களை உள்ளே அழைக்க, அக்காட்சியை கண்டு அனைவருமே ஆனந்தமாக திகைத்தனர்.

மதிவதனி கண்கள் அவரையும் மீறி கலங்கியது. ஒளிர்மதியை சங்கீதாவிடம் ஒப்படைத்தது, குழந்தைகளின் அழுகுரல், பலத்த காற்றின் கவலையான ஓசை, ஆக்ரோஷமான மழை பொழிவு... எல்லாமே திரையாக ஓடியது.

மதிவதனியோடு பிள்ளைகள் மூவரையும் நிற்க வைத்தவராக, மகமாயி நால்வருக்கும் சங்கீதாவோடு ஆலம் சுற்றி வரவேற்க, தனது திருமண நாள் மதிவதனிக்கு கண்முன் விரிந்தது.

சக்திக்கும், வதனிக்கும் இதே போல் ஆலம் சுற்றினர். சக்தியின் கைவிரல்களை காற்று புகாத அளவிற்கு இறுக பற்றி, தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த மதிவதனியை பூஜை அறைக்கு அழைத்து சென்றது, விளக்கேற்றி இறைவனை வணங்கியது!

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now