கண்ணன் வரும் வேளை

133 13 6
                                    

உயிர் உருகும்

காதலுடன்

காத்திருந்த

ஆண்டாளுக்கும்

மீராவுக்கும் தெரியும்

அவர்களின் காத்திருப்பு

கண்ணனுக்காக என்று....

அவர்களின் காதல் தலைவன்

கண்ணன் தான் என்று....

யாரவன் என்றே

தெரியாமல்

மனம் நிறைந்த காதலுடன்

காத்திருக்கிறேன்

கலியுக மீராவாய்

என் கண்ணனுக்காக....

-- நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now