உயிர் உருகும்
காதலுடன்
காத்திருந்த
ஆண்டாளுக்கும்
மீராவுக்கும் தெரியும்
அவர்களின் காத்திருப்பு
கண்ணனுக்காக என்று....
அவர்களின் காதல் தலைவன்
கண்ணன் தான் என்று....
யாரவன் என்றே
தெரியாமல்
மனம் நிறைந்த காதலுடன்
காத்திருக்கிறேன்
கலியுக மீராவாய்
என் கண்ணனுக்காக....
-- நர்மதா சுப்ரமணியம்
![](https://img.wattpad.com/cover/131601592-288-k296794.jpg)
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக