காத்திருக்கும் கன்னி மயில்

98 9 1
                                    

வாய்விட்டு சிரித்தாலும்
மனம் சிரிக்க மறுக்கிறது...

ஒளி பொருந்திய
கண்ணாயினும்
ஏதோ தேடல் தெரிகிறது....

எந்த திருமண
நிகழ்வை கேட்டாலும்
மனதில் ஏக்கம்
குடிகொள்கிறது.....

நீ இல்லாத வாழ்வு
வெறுமையென
உன்னை பார்க்கும்
முன்பே உணர்கிறேன்...

என் வாழ்வில்
தென்றலாய் மட்டுமே
நீ வருவாய் என்கின்ற
நம்பிக்கையில்
காத்திருக்கிறது என் நெஞ்சம்...

---நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now