பாரதி மனதால் சிரித்தது ஏன் என்றால். முதல் இரண்டு ப்ரஷன்டேஷனும் முதலாம் பாட வேளையிலும் மற்றைய இரண்டும் இடைவேளையை தொடந்தும் என்றிருந்தது.
பாரதியின் ப்ளேன் பழிக்க வேண்டும் என்றால் ஆதி அவனது ப்ரஸன்டேஷனை இடைவேளையை தொடர்ந்து செய்ய வேண்டும்.
பாரதியின் பிரார்தனையை கடவுள் அங்கீகரித்து விட்டார் போலும்.
ஆசிரியர் அனைவரையும் அமருமாறு கூற அனைவரும் அமர்ந்தனர்.
பாரதி ஆதியையே பார்த்த வண்ணம் இருக்க வழமையான அவனது ஆசனத்திலேயே அமர்ந்தான்.
ஹப்பா.....
இருந்துட்டான்யா....
இருந்துட்டான் 😂😂😂ஆசிரியர் ப்ரஸன்டேஷன் ஐ ஆரம்பிக்குமாறு கூற பாரதி சிரித்த முகத்துடனே ப்ரஸன்டேஷனை ஆரம்பித்து மிக அழகாக, நேர்த்தியாக, உரிய நேரத்தில் அனைவருக்கும் விளங்கும் படி தெளிவாக செய்து முடித்தாள்.
பாரதியை தொடர்ந்து கெளசிக்கும் செய்ய. பாரதியின் அளவு நன்றாக இல்லா விட்டாலும் அவனால் முடிந்தளவு நன்றாக செய்து முடிக்கவும் இடைவேளை மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அனைவரும் வெளியேற. ஆதி நண்பர்களிடம் முன்னே செல்லுமாறும் சிறிய வேலை ஒன்று உள்ளது நான் முடித்து விட்டு வருகிறேன் என்று வகுப்பறையில் தரித்து நின்றான்.
பாரதி இடைவேளைக்காக வெளியில் செல்லாமல் தனது குழு அங்கத்தவர்களுடன் கதைத்த வண்ணம் இருக்க.
ஆதி தனது வேளையை முடித்த விட்டு
சரி இப்ப ப்ரஸன்டேஷன் செய்றது மட்டும் தான் இருக்கு என்ற படி எழுந்திருக்க முயள அவன் கால் சட்டை பின் புறம் ஏதே இழுபட்டது.
பாரதியின் குழு அங்கத்தவர்கள் ஆதியின் நிலையை பார்த்து சிரித்தனர்.
ஆம் பாரதியின் வேளையே தான்.
ஆதியின் கதிரையில் ஸ்வீங்கத்தை ஒட்டி தூசை தடவி வைத்தாள்.
![](https://img.wattpad.com/cover/254936745-288-k290325.jpg)
YOU ARE READING
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....