மாலையில் புடவை எடுக்கச் சென்ற போது பாரதியின் கண்கள் கணவனாக வரப்போகின்ற க்ரிஷைத் தேடி கடையின் அடிக்கடி வெளியே பார்ப்பதும் உள்ளே பார்ப்பதுமாக இருக்க.
இதனை அவதானித்த ரோஹினி, கவியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு
அண்ணி என்ன யோசன பலமா இருக்கு?
இல்லயே ரோஹினி நா... நான் நேர்மலா தான் இருக்கன்.
இல்லயே அண்ணி. நீங்க யாரயோ வலை விரிச்சி தேடுறது போல இருக்கு.
ஏன்.அண்ணி என் உத்தம அண்ணாவ தேடுரீங்களா? என கேட்டு ரோஹினியும் கவியும் ஹைபை போட்டு சிரித்த வண்ணம்.
அண்ணி அவன் தான் பெரிய இவனாட்டம் உங்கள மணமேடைல தான் பார்ப்பேன் என்டு இருக்கானே அண்ணி என்று பாரதியின் மனக் கோட்டையை உடைத்து விட்டாள்.கடையில் இருந்த புடவையை பார்த்த பாரதிக்கு தலை கால் புரியவில்லை. எல்லாம் அழகாக இருந்தது.லதாவும், மகாவும் கடையையே புறட்டிப் போட்டனர். அப்பொழுது கடையின் பணியாளர் ஒருவர் லதாவின் அருகே வந்து.
இங்க பாரதி என்றது யாரு? நீங்களா என பாரதியை கை காட்டி கேட்க ஆமா?
நீங்க? "இத உங்க புருஷன் செலக்ட் பண்ணினாறு."என்னது புருஷனா? என பாரதி அதிர்ந்ததை விட ரோஹினி, கவி கோரசாக புருஷனா? என.வாய் மேல் கை வைக்க.
இல்ல மேடம் புருஷனா வரப்போறவங்கனு சொல்ல வேண்டியத கொஞ்சம் மாத்தி சொல்லிட்டன்.
அது என ரோஹினி ஒரு லுக்கு விட்டாள்.
சரி இவ தான் பாரதினு யாரு உனக்கு சொன்னாங்க என லதா கேட்க.
இல்ல நீங்க எல்லாம் இவங்களுக்கு புடவை வச்சி பார்க்கிறத வச்சி தெரிஞ்சிகிட்டேன்.
லதாவை கை காட்டி. இந்த மேடம் கூட வார பாரதி என்ற பொண்ணுக்கு கொடுக்க சொன்னாங்க.
நீங்க வரதுக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் கிரிஷ் சார் வந்து இந்த சாரிய செலக்ட் பண்ணிட்டு போனாறுமா.. என்று கூறி பையை பாரதி கையில் திணித்தான்.
ČTEŠ
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....