இரண்டு நாட்கள் கடந்து பாரதி ஜூஸ்ஸூடன் கவியின் அறையை நோக்கி சொல்லும் போது. ஏய் நில்லு டீ. என்ற கோபமான அழைப்பில் திரும்பிப் பார்த்தாள் பாரதி. அங்கே சரளா கோபத்துடன் கண்கள் சிவக்க நின்றிருந்த விதம் பாரதிக்கு உள்ளுர குளிர் விட்டாலும் வெளியே தைரியமாக நின்றிருக்க.
பாரதி கையில் இருந்த ஜூஸை பரித்த வேலைக்கார பெண்ணிடம் கொடுத்த. என்ன அத்த என வாய் திறக்க, சரளாவின் சுட்டெரிக்கும் பார்வையால் வாயை மூடி மெளனமானாள்.
சரளா வேலைக்கார பெண்ணிடம் கவிக்கு ஜூஸை கொடுக்குமாறு பணித்து விட்டு.
நீ வாடி என பாரதியின் கையை பிடித்து தர, தரவென இழுத்துக் கொண்டு அவரது அறைக்கு இழுத்துச் சென்றார்.
பாரதியை இழுத்து வந்து ஒரே பிடியில் விட்டதால், பாரதி சரளாவின் கட்டிலில் விழுந்தாள்.
சரளா பாரதியை பார்த்து உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? என்னோட மருமக இப்பதான் உண்டாகி இருக்கா... அது உனக்கு பிடிக்கல்லையா?
ஐயோ அத்த நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. நான் கவிக்கு ஜூஸ் கொடுக்கத்தான் போனேன்.
சரளா முறைத்த படி அந்தக் கருமத்தை தான் நானும் சொல்லுறன். நான் குத்து கல்லாட்டம் இருக்குறப்போ. நீ எதுக்கு இது எல்லாம் பண்ணுற.
குழந்த பாக்கியம் இல்லாத நீ இதெல்லாம் செய்யலாமா? உன் தலைக்குல் மூலைனு ஒன்னு இருக்கு தானே. எதுவுமே தெரியாம பண்ணுறிய்யா? இல்ல எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிரியா? உனக்கெல்லாம் எங்கே குழந்தை பிறக்கப் போகுது.
கவிக்கோ இல்ல அவ வயித்துல வளர்ர குழந்தைக்கோ ஏதாச்சும் ஆகட்டும். அதுக்கு அப்புறமா உன்னக்கு நான் யாருனு காட்டுறேன்.
ப்ளீஸ் அத்த இப்படி எல்லாம் பேசாதீங்க. மனசாட்சியே இல்லாம நீங்க கதைக்கிரீங்க. நீங்களும் ஒரு பெண்ணு தானே. கவி என்னோட கூடப் பிறந்தவ. அவளுக்கு நான் கெடுதல் நினைப்பேனா? என்னோட வலிய புரிஞ்சிக்காம இப்படி வாய்க்கு வந்த படி பேசுரீங்க. இது உங்களுக்கே தப்பா தெரியலயா?
KAMU SEDANG MEMBACA
என் அவள்
Romansaகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....