கனி - கொல்லுடா கொல்லு ஏன் அமைதியா இருக்க....உன்னுடைய கையாலே கொன்னுடு
என்று கனி கண்களில் கண்ணீருடன் அழுகும் காட்சியை கண்டவன் அவள் கழுத்தில் இருந்து தன் கையை எடுக்க
கனி - இப்போ என்ன நான் சாகணும் உனக்கு...அதுதானே தேவை...சரி நான் செத்துப் போறேன்
என்று ஆதங்கத்தோடு கத்தியவள் தன் தாவணியை மார்போடு அணைத்துக் கொண்டபடி அருகில் இருந்த அறைக்குள் ஓடியவள் கதவை தாழிட.....ஒரு நொடி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றிருந்த கமலின் தேகம் சூடாகி மீண்டும் கோபமாக பக்கத்தில் இருந்த அறையை நோக்கி சென்றவன் room கதவை எட்டி உதைக்க... கனி ஒரு chair மேல் ஏறி நின்று fanil sareeyai கட்டிக்கொண்டு இருக்க.... கமல் அவள் அருகில் சென்றவன் அவள் கரங்களை பிடித்து அவளை கீழே இழுக்க..... அவள் கால் தடுமாறி தரையில் விழுந்தவளை பார்த்தவன்
கமல் - அவ்வளவு சீக்கிரம் எல்லாம் நீ சாகக்கூடாது டி.... என் மகனை நீ எப்படி அழிச்சியோ அதே போல உன்னை நான் தாண்டி அழிப்பேன்...
கனி - இப்பவும் சொல்றேன் நான் அந்த பிள்ளையை அழிக்கல
கமல் - பொய்.... பொய்..... வாயை துறந்தா பொய்.......
கனி - நீ என்னை என்ன நினைச்சாலும் சரி.....நான் சொல்றது தான் உண்மை..
கமல் - உன் உண்மையை நீ தாண்டி மெச்சிக்கணும்... உனக்கு உன்னோட நல்ல பெயர் முக்கியம்னு என் பிள்ளையை அழித்த பாவி டி நீ......
கனி - போதும் நிறுத்து நீ பொய்யை கத்தி சொன்னா அது உண்மையாக மாறாது
கமல் - ஆமா ஆமா உண்மையை பத்தி நீயெல்லாம் பேசுற பாரு சிரிப்பா தான் டி இருக்கு... இங்க பாரு நீ ஒரு துரோகி.... என்னை நம்ப வச்சு ஏமாற்றின ஏமாத்துக்காரி.. என் காதல் என் அன்பு என் பாசம் என் எதிர்காலம் இது எல்லாத்தையும் மண்ணோடு மண்ணாக புதைத்த பாவி டி நீ...
கனி -
கமல் - உடலை விற்று வயிற்றை நிரப்பும் பெண்கள் கூட என்னை பொறுத்த வரை புனிதமே... ஆனா நீ அதெல்லாம் மீறி
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)