பத்து வயது சிறுவனாய் இருந்த கமலை அவன் அம்மா வசுந்த்ரா படிக்கட்டில் இருந்து எட்டி உதைத்ததும் உருண்டு வந்து கீழே விழுந்தவனை எட்டு வயது சிறுமி கனிமொழி அவனை அன்போடு அரவணைத்து தூக்கியவள் மழலை குரலில்
ஐயோ என்ன ஆச்சு....ஏன்.. படிக்கட்டிலிருந்து கீழே விழுந்துட்டியா...பார்த்து கீழே இறங்க கூடாது... எழுந்திடு எழுந்திடு அடிபட்டுருச்சா...தலையில எங்கேயாவது அடிபட்டு இருக்கா....கை கால் எல்லாம் உதறு....நான் கீழே விழுந்தா அம்மா என்னை இப்படி தான் பண்ண சொல்லுவாங்க....
என்று கனிமொழி கமலை அன்புடனும் அக்கறையுடனும் பேசுவதை ரசித்த கமலின் இதயத்தில் முதல் முறையாக அன்பு என்னும் விதை விழ.......வசுந்தரா வேகமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவள் கமலின் முடியை பிடித்து
டேய் உன்ன நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் நான் இந்த வீட்டுக்குள்ள வரும்போது என் கண் எதிரில நீ இருக்கவே கூடாதுன்னு... உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் கண் எதிரில வந்து என்னை தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்ப.....உன்ன இப்படியே விட்டா நீ சரி வர மாட்ட....இரு....டேய் சங்கர் இங்க வா
என்று கோவமாக வசுந்த்ரா ஒருவனை அழைக்க.....
சங்கர் - என்ன darling
vasunthra - அது அங்க ஒரு ரூம் இருக்குல்ல.... இவன் டிரஸ் எல்லாம் கழட்டி அது உள்ள விட்டு கதவை சாத்து
சங்கர் - ஏய் வாட் இஸ் திஸ் ஏன் நமக்கு இந்த வேலை எல்லாம்
vasunthra - உனக்கு சொன்னா புரியாது........ இந்த மாதிரி இவனை ஒரு தடவை பண்ணா தான் அடுத்த தடவை என்னை பார்த்தாலே இவன் என் கண் எதிர்க்க வரமாட்டான்..
கமல் - அம்மா வேணாமா... அங்க இருட்டா இருக்கும்... வேண்டாம்.. நான் போகல.. நான் வேணும்னா இனிமே உங்க கண் எதிர்க்க வராம இருக்கேன்....என்னை அந்த ரூம்குள்ள எல்லாம் அனுப்பாதீங்க....ப்ளீஸ்மா வேண்டாம்
vasunthra - இல்ல இல்ல ஒரு தடவை உனக்கு இந்த தண்டனையை நான் கொடுத்தாதான் அடுத்த தடவை நீ இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன்
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)