18 மாதங்கள் கடந்த நிலையில்....
கமலின் தாத்தா விஸ்வநாதனின் பங்களாவில் வேலை செய்யும் நபர்கள் பரபரப்பாக அவர்களின் பணியை செய்து கொண்டு இருக்க.....கண்ணம்மா - தம்பி அந்த பக்கம் பூ இல்ல பாருங்க... ஒழுங்கா தோரணம் கட்டுங்க பா...
சீக்கிரம் சீக்கிரம் வேலயை பாருங்க...ஒருவன் - என்ன கண்ணம்மா ஒரே பரபரப்பா இருக்கீங்க...
கண்ணம்மா - என்ன பண்ண சொல்றிங்க.... பல மாசமா கல்லறை போல இருந்த வீடு... இன்னைக்கு தான் கோவில் மாதிரி மாறி இருக்கு...
ஓருவன் - ம் ஆமா மா... பாவம் உங்க மக... ஹாஸ்பிடல்க்கும் கோர்ட்க்கும் அலைந்து அலைந்து நிம்மதியே இல்லாம ஆகிட்டா இல்ல....
கண்ணம்மா - அவளை எந்த நேரத்தில் பெத்தேனோ தெரியல... எல்லாம் என் தலையெழுத்து
ஒருவன் - சரி எங்க கனியை காணோம்...
கண்ணம்மா - கனி சித்ராவை பார்க்க போய் இருக்கா...
ஒருவன் - சரி நீங்க வேலையை பாருங்க... நான் போய் கமல் ஐயா அறையை கொஞ்சம் சுத்தம் பண்றேன்..
கண்ணம்மா - ஐயோ வேணா வேணா தம்பி.... அந்த room குள்ள கனியை தவிர வேற யாரும் போக கூடாது
ஒருவன் - சரி மா... நான் போய் வேற வேலையை பாக்குறேன்
கண்ணம்மா - ம் சரி பா..
என்று சொன்ன கண்ணம்மா பங்களாவில் உள்ள வேலையை பார்க்க...கனி மொழி.. Dr.சித்ராவை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல...
Dr.சித்ரா - வா கனி....
கனி - சித்ரா.....
Dr. சித்ரா - வா உள்ள வா...
கனி - சித்ரா... என் கமல்...
Dr. சித்ரா - ம் உன் கமல் தான்....
கனி - நான் கமலை பாக்கலாமா.... அவனை பார்த்து எத்தனை மாசம் ஆகிடுது
Dr. சித்ரா - இரு இரு ஏன் இப்போ உணர்ச்சி வசப்படுற...முதல்ல கமலின் மன நிலையை நீ இப்போ முழுசா புரிஞ்சிக்கோ ok வா...
கனி - கமலுக்கு முழுமையா குணமாகிடுதுன்னு தானே நீ சொன்ன...
Dr. சித்ரா - ஆமா... இப்போ யாரு இல்லைனு சொன்னாங்க.... BUT
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)