தியாகு - டேய் இவ்வளவு அடி வாங்கியும் இன்னும் உனக்கு திமிர் போகல இல்ல...
கமல் - போகாதுடா... எப்படி போகும்...அப்பன் பேர் தெரியாத பிள்ளை... பெத்தவளுக்கு பிடிக்காத பிள்ளை... இப்படி கண்ட பேரையும் வாங்கி இருக்கிற எனக்கு திமிர் உங்களைவிட கொஞ்சம் அதிகமா தான் இருக்கும்
கனி - கமல் கமல் உனக்கு ஒன்னும் ஆகலையே.... அய்யோ தலையில ரத்தம் உறைந்து போய் இருக்கு கமல்....இரு நான் தலையில் கட்டு கட்டி விடுறறேன்
கமல் கனிமொழியை இறுக்கி கட்டிப்பிடித்தவன்
கமல் - கட்டு வேணும் தாண்டி....ஆனால் தலையில் இல்ல உன்னுடைய இந்த அணைப்பினால் வர கட்டிப்பிடி வைத்தியம் மட்டும் எனக்கு போதும்
என்று சொன்ன கமல் அனைவர் எதிரிலும் கனிமொழியை கட்டிப்பிடித்து அவள் இதழோடு இதழ் சேர்க்க கோபம் கொண்ட வசுந்தரா
vasunthra - டேய் நீ இன்னும் அடங்கவே இல்லல்ல...அண்ணா இவன் கை கால உடைத்து அந்த மூளையில் தூக்கி போடுங்க
கமல் - வாம்மா வா...என்னை பெத்த புண்ணியவதியே mmஒரு பெத்த மகனை கை காலை உடைத்து தூக்கிப் போட சொல்ற உலகத்திலேயே ஒரு சிறந்த அம்மா நீ மட்டும் தான்
vasunthraa - டேய் போதும் நிறுத்துடா நான் உனக்கு அம்மானு எனைக்காவது சொல்லி இருக்கேனா...நீ தான்டா என்னை அம்மா அம்மானு கூப்பிடுற...ஒரு நாள் கூட உன்னை நான் என் மகனா நினைச்சதும் இல்ல இனி நினைக்கவும் மாட்டேன்
கமல் - யூ ஆர் ரைட் mmஎனக்கும் இந்த ஒரு வார்த்தை தான் தேவை... நான் கூட எங்க திடீர்னு மகனேன்னு கூப்பிட்டு என் மேல பாசம் வச்சுடுவியோனு தப்பு கணக்கு போட்டுட்டேன்
வசுந்தரா - உன் கணக்கு எப்பவுமே தப்புதாண்டா அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் நான் போடுற கணக்குப்படி தான் இங்க எல்லாமே நடக்கணும்.. இங்க பார் உன்னுடைய கடந்த கால வாழ்க்கையை பத்தி இப்பதான் இதோ இந்த வேலைக்காரி சொல்லி முடிச்சா...முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்...இனிமே எனக்கு அந்த கதையெல்லாம் தேவையில்ல, ஆனா இப்போ இந்த நொடி இந்த கதையுடைய முடிவை நான் எழுதுறேன்
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)