கமல்......கனியை அவன் அறைக்குள் தூக்கி வந்தவன் அவளை கீழே இறக்கியபடி கதவை தாழிட...கனி - ஏய் என்ன பண்ற.. நீ கதவை திற..
கமல் - உஷ் ஏன் கத்துற.... சரி வா எனக்கு பசிக்குது
கனி - பிச்சிடுவேன் உன்னை.... என்ன நக்கல் பண்றியா... வெளிய அத்தனை பேர் இருக்கும் போது இப்படியா பண்ணுவ.. அவுங்க எல்லாம் என்னை என்ன நினைப்பாங்க
கமல் - இப்போ ஏன் நீ இவ்வளவு ரியாக்ட் பண்ற..
கனி - நான் வெளிய போகணும் வழியை விடு...
கமல் - நில்லு கனி...
கனி - கமல் நீ வர வர ரொம்ப தேவையில்லா விஷயங்களை எல்லாம் பண்ற ....இப்போ என்ன பிரச்னை உனக்கு ....ஏன் இப்படி அராஜகம் பண்ற...
கமல் - ஏய் நான் என்ன பண்ணேன்... எனக்கு பசிக்குது உங்கிட்ட என் பசியை போக்க சொன்னேன் அவ்வளவு தானே..
கனி - வர வர உனக்கு என்னை அழ வச்சு பாக்குறதுல சந்தோஷமா இருக்கு இல்ல..
கமல் - உஷ்.....இப்போ ஏன் கத்துற ..சரி என் பசியை தீர்க்க உனக்கு மனசு இல்லைனா நீ வெளிய போ.... நான் பட்னியா இருந்துகிறேன்..
கனி - போடா இவனே ...வெளிய இருக்குறவுங்க என்ன எல்லாம் கேக்க போறாங்கன்னு தெரியல
கமல் - உனக்கு தான் ஏழுறு வாய் இருக்கே போ போய் எதாவது பேசி சமாளி ..
கனி - சரி நீ வெளிய வா வந்து சாப்பிடு..
கமல் - நோ.... நான் கேட்ட சாப்பாடு தான் எனக்கு வேணும்.....இல்லையா நான் பட்டினியா தான் இருப்பேன்..
கனி - அப்படியா..... ரொம்ப சந்தோஷம் நீ பட்டினியாவே இரு...
கமல் - நீ மட்டும் இன்னைக்கு எனக்கு நான் கேட்டதை தரலன்னு வை....நான் அந்த டாப்ஸியை கல்யாணம் பண்ணிப்பேன்..
கனி - பண்ணிக்கோ.... யாரு வேணா சொன்னாங்க...
கமல் - நான் டாப்ஸியை கடிக்க கூடாதுனு நீ தானே டாக்டர் அங்கிள் கிட்ட சொன்ன..
கனி - நானா.....நான் எல்லாம் சொல்லல..
கமல் - பொய் சொல்லாத... நேத்து நைட்டு டாக்டர் என்கிட்ட பேசினார்...நீ அவர்கிட்ட இந்த ஐந்து வருஷமா என்னை விசாரித்ததுல இருந்து...எனக்கு உடம்பு மூளை எல்லாம் எப்படி இருக்குனு நீ மட்டும் தான் விசாரிப்பன்னு சொன்னாரு..