கனி - ஐயோ என்ன கமல் இது இப்படி மழை வருது...
கமல் - தரை எல்லாம் வழுக்குது கனி... என்னை இறுக்கமா பிடிச்சுக்கோ..
என்று கமல் சொல்லி முடிக்கும் காட்டிலும்.. கமலின் இரு சக்கர வாகனம் வழுக்கி கனி மொழி கீழே விழ...
கமல் - ஐயோ கனி
என்னாச்சு ஏய் அடி எதாவது பட்டுச்சா
கனி - இல்ல இல்ல எனக்கு ஒன்னும் ஆகல..ஆனா என்ன டா இது இப்படி வந்து மழையில மாட்டிகிட்டோம்.. நான் அப்பவே சொன்னேன்... நீ தான் கேக்கல
கமல் - இப்போ ஏன் கனி கோவப்படுற... இரு நான் வண்டிக்கு என்னாச்சுன்னு பாக்குறேன்
கனி - ஐயோ இங்க பாரு dress எல்லாம் சகதியா ஆகிடுது...
கமல் - இரு இரு அவசர படாத... வண்டி start ஆனதும் கிளம்பிடலாம்
கனி - வண்டிக்கு என்னாச்சு
கமல் - வண்டி start ஆகல
கனி - இப்போ என்ன பண்ண... மழை வேற அதிகமா இருக்கு
கமல் - வா பேசாம நம்ம புது பங்களாக்கே திரும்ப போயிடலாம்...
கனி - என்ன டா சொல்ற பங்களாக்கா
கமல் - ஆமா கனி சாவி நம்மகிட்ட தானே இருக்கு... வா walking distance தான்... நம்ம அங்க போயிட்டு வெயிட் பண்ணலாம்.. எப்படியும் மழை நின்னதும் கண்ணயா மாமா நம்மள அழைச்சிட்டு போக வருவாரு வா
கனி - ம் சரி வா
கமல் - கனி இரு இரு
கனி - என்ன
கமல் - இந்தா இந்த kerchief தலையில் போட்டுக்கோ
கனி - ஐயோடா முழுக்க நினைந்ததுக்கு பிறகு முக்காடு எதுக்கு..
கமல் - சரி வேணானா வா
கனியை அழைத்துக்கொண்டு மீண்டும் கமல் புது பங்களாக்கு செல்ல...கனிமொழியின் ஆடைகள் முழுதும் மழையில் நனைந்து இருக்க..இவர்கள் பங்களாக்குள் சென்றதும் கமல் வீட்டின் கதவை தாழிட்டவன்....
கமல் - கனி நீ போய் டிரெஸ்ஸ மாத்திக்கோ..
கனி - என்ன விளையாடுறியா இங்க எங்க டிரஸ் இருக்கு நான் எதை மாத்திக்கிறது
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)