கனி - ஐயோ கமல் கையை எடு கமல்...
கமல் - விடு கனி என்னை... இந்த ஆளுக்கு என்ன திமிர்.... நான் இந்த ஆளோட பையன் தானே.... இந்த ஆளை அந்த பொம்பளை போட்டு தள்ளும் போது நீ தானே காப்பாத்தின
கனி - சரி சரி இப்போ ஏன் இப்படி கத்துற.... விடு அவர....
கமல் - இந்த ஆளை நான் என் கையாள கொன்னுடுறேன் பாரு...
கனி - விடு கமல்.. மாமா நீங்க உடம்பை பாத்துக்கோங்க.. கமல் வா போகலாம்
கமல் - சொல்லி வை இந்த ஆளுகிட்ட.. இவன் உசுரோட இருக்க நான் தான் காரணம்.... நான் இந்த உலகத்துக்கு வரவும் இவன் தான் காரணம்... இந்த ரெண்டுமே இவனால தான்... இவனால தான்...
கனி - ஐயோ கமல் கொஞ்சம் சும்மா இரு.... மாமா நாங்க கிளம்புறோம்... நீ வா கமல்...
என்று சொன்ன கனி கமலை அழைத்து கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேர.... மறுபக்கம் கமலின் புது பங்களாவில் தியாகு தலையில் காயத்துடன்... வீடே ரெண்டாகிய நிலையில் அமர்ந்து இருக்க.... Tapsi இங்கும் அங்குமாக கோபத்துடன் நடந்து கொண்டு இருந்தவள்... கமலின் அம்மா வசுந்தரா மற்றும் கமலின் மாமா வசந்த் வீட்டுக்குள் வருவதை பார்த்து ஓடோடியவள்
Tapsi - aunty நீங்க ஏன் இவ்வளவு late... இங்க பாருங்க... இந்த கமல் என்ன பண்ணி வச்சி இருக்கான் பாருங்க...
வசுந்ததரா - என்ன இது.. ஏன் வீடு இப்படி இருக்கு.... ஐயோ தியாகு என்ன உன் தலையில இவ்வளவு பெரிய கட்டு.....
தியாகு - அத்த அத்த.... இந்த கமல் என் மண்டையை அடிச்சு உடைச்சிட்டான்
வாசுந்தரா - ஏன் என்னாச்சு.... எதனால இந்த மாதிரியெல்லாம் நடந்துச்சு...
Tapsi - தெரியல அத்த..நீங்களும் டாடியும் வெளியே போன பிறகு கமல் எங்க கூட ஹேப்பியா தான் இருந்தான்.. இங்க work பண்ணுமே ஒரு பொண்ணு கனி... அவளை தியாகு என்னமோ பேசினான்னு கமல் கோவப்பட்டு தியாகு மண்டையை உடைத்தது மட்டும் இல்லாம..என்னையும் அடிச்சுட்டான்..
வசந்த் - இங்க பாரு வசுந்தரா எனக்கெனமோ கமல் அந்த வேலைக்காரியை காதலிக்கிறான் என்று தோணுது
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)