கமல் - ஏன் அப்படி பாக்குற
கனி - என்ன பண்ற நீ
கமல் - தெரில உன் மேல படுத்து தூங்குறேன்
கனி - மணி ஆகுது கமல்... இன்னைக்கி உனக்கு நிச்சியம் நடக்க போகுது இல்ல
கமல் - அதுக்கு
கனி - போய் கிளம்பு போ
கமல் - முதல்ல இங்க வேலையை முடிச்சிட்டு அப்புறம் போறேன்
கனி - ஆமா ஆமா என்கிட்ட வேலையை முடிச்சிட்டு வெளிய போய் tapsi கையில ரிங் போடுவியா
கமல் - சரி விடு அதையும் உனக்கே போடுறேன்
கனி - ஒன்னும் வேணா...நீ அவங்களையே கட்டிக்க்கிட்டு ஒரு பிள்ளையை பெத்துக்கோ
கமல் - எவன் எவனோ பெத்த பிள்ளைக்கு என்னை அப்பனாக சொல்றியா
கனி - என்ன பேச்சு இது
கமல் - அவ வேற எவனையோ love பண்ணுறா... இந்த சொத்து தான் அவுங்க target... so எனக்கு எல்லாம் அவ set ஆக மாட்டா
கனி - சரி அப்போ உன் அம்மாகிட்ட சொல்லி உனக்கு வேற பெண்ணை பாரு
கமல் - அந்த பொம்பளை அவுங்களுக்கு வேணா வேற மாப்பிள்ளை பாத்துப்பாங்க..
கனி - ம் இப்படி பேசுனா அப்போ உனக்கு கல்யாணமே ஆகாதா
கமல் - என்னை எல்லாம் யாரு கட்டிப்பா... நான் ஒரு கிறுக்கன்... என்கூட எல்லாம் யாரு வாழ முடியும்....
கமல் சட்டென்று அவள் பக்கம் இருந்து எழுந்தவன்...
கனி -🙄
கமல் - சரி நீ போ..
கனி - கமல்
கமல் - சொல்லு..
கனி - என்னாச்சு கமல்
கமல் - கனி நம்ம கடந்த கால வாழ்கைக்கு போனா எப்படி இருக்கும்....எனக்கு இந்த life பிடிக்கல கனி... எனக்கு பயமா இருக்கு..... நான் எங்க கொலைகாரனா மாறிடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு......
கனி - நீ ஏன் அப்படி மாறனும்....ஏன் உனக்கு நீயே எதை எதையோ யோசிச்சு இப்படி குழம்பிக்கிட்டு இருக்கிற