கமல் தலையணையை எடுத்துக்கொண்டு கனியின் அருகில் சென்ற தருணம் கனிமொழி உறக்கத்திலிருந்து எழுந்தவள் அவனைப் பார்த்து பயந்தபடி கட்டிலில் இருந்து கீழே விழ போனவளை தாங்கிப் பிடித்தவன்கமல் - ஏய் என்ன.......பார்த்து கீழ விழுந்துற போற...... என்ன ஆச்சு
கனி - இல்ல இந்த தலையணை
கமல் - ஆமா த pillow ......நீதான் எப்பயும் ரெண்டு pillow வச்சு தூங்குவியே அதான் உன் தலைக்கு கீழே தலையணை கொடுக்க வந்தேன்
கனி - ஓ.... என் தலைக்கு தலையணை கொடுக்க வந்தியா
கமல் - ஆமா...... இந்தா வச்சுக்கோ
கனி - தேங்க்ஸ்
கமல் - ஏய் இரு இரு......நீ என்ன நெனச்ச
கனி - நான்.......நான் என்ன நெனச்ச... நான் ஒன்னும் நினைக்கலையே
கமல் - பொய் சொல்லாத.. இந்த தலையணையை உன் மூஞ்சில வச்சு நான் அமிக்கிட போறேன்னு தான நினைச்சேன்
கனி - அது அது வந்து
கமல் - உன் முண்டக்கண்ணை பார்த்தாலே தெரியுது நீ கண்டிப்பா என்னை அப்படி தான் நினைச்சிருப்ப..
கனி திருத்திருவென்று விழிக்க.....கமல் சிரித்த முகத்துடன் இன்னொரு தலையணையை எடுத்து அவள் அருகில் போட்டபடி அவள் பக்கம் படுத்துக்கொள்ள
கனி - கமல் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்ட இல்ல
கமல் - சேச்சே நான் எப்படி உன்னை தப்பா நினைப்பேன்.....ஆயிரம் தான் இருந்தாலும் நீ என்னுடைய முன்னால் காதலி உன்ன தப்பா நெனச்சாலும் பரவாயில்லை சொல்லு
கனி - ஏன் நீ அம்மாகிட்ட இந்த மாதிரி எல்லாம் பேசுற
கமல் - இப்ப நீ எதுக்காக அந்த ராட்சசியை பத்தி பேசிக்கிட்டு இருக்க....இங்க பாரு உனக்கு உடம்பு சரியில்ல.... இன்னும் கேட்டா என்னுடைய நிலைமைக்கு எப்படி நீ காரணமோ...அதே மாதிரி உன்னுடைய இந்த நிலைமைக்கு நான் காரணம்...அதனால உன் உடம்பு சரியாகும் வர வாய மூடிக்கிட்டு இந்த மாத்திரை மருந்து போட்டுக்கிட்டு கம்முனு படு....