உயிரின் தாகம் காதல் தானே..💔06

1.5K 33 6
                                    

      கனகாவிற்கு அழைத்து அவரை பேச விடாமல் கண்ணீருடன் பேசிக் கொண்டு இருந்தவளின் கையில் இருந்த போன் திடீரென பறிக்கப்பட திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மதியழகி. அங்கு அவளிடம் இருந்து போனை பறித்து அதனை ஆராய்ந்த ஷியாம் சுந்தர் மீண்டும் தனது காதில் வைக்க


     "ஹலோ ....ஹலோ மதிம்மா.. உனக்கு என்ன ஆச்சு?"
என்ற கனகாவின் குரலே அவன் காதுகளுக்கு கேட்டது .
அடுத்த கனமே கோபத்தில் முகம் சிவக்க போனை தூக்கி தரையில் அடித்தான். அதுவோ சுக்கு நூறாக உடைந்து போனது.. உடைந்த ஃபோனையும் ஷியாமையும்  மாறி மாறி பார்த்தவளின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் இப்போது துணி கொண்டு துடைத்தார் போல இல்லாமல் போனது..



    பயத்தின் காரணமாக வெளிப்படையாகவே அவளது தேகம் நடுங்கத் தொடங்கியது. அவளது பயத்துக்கு மாறாக அவனோ கூலாக நின்று இருந்தான். அதை கவனிக்கும் நிலையில் கூட அவள் இல்லை..
" வா என் கூட .."
என்று கூறியவன் முன்னே நடக்க அவள் அசையாமல் நின்று இருந்தாள் அந்த இடத்திலேயே..


       சற்று தூரம் சென்றவன் அவளை திரும்பிப் பார்த்து
"ஏய்..."
என்று சத்தமாக அழைக்க அந்த குரலில் தூக்கி வாரிப் போட ஓடி வந்தாள் அவன் நின்ற இடத்திற்கு.



     குனிந்து அவளை பார்த்தவன் "நான் சொன்னா அதை நீ செஞ்சே ஆகணும்... இல்லைனா எனக்கு கெட்ட கோபம் வரும்... புரியுதா..?" என பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப
"ம்....ம்.."
என்ற படி நான்கு பக்கமும் தலையை உருட்டி வைத்தாள் அவள் .

"சரி வா ...."
என கூறி விட்டு அவன் முன்னே நடக்க அவனது பின்னால் ஓடிச் சென்றாள் மதியழகி..



     அவனது பின்னால் சென்றவள் அவன் ஒரு இடத்தில் சட்டென்று நிற்க அவனது பலம் கொண்ட முதுகில் மோதி ஓரடி பின்னால் சென்று நின்றாள்.  அவனது முதுகில் பட்ட தனது நெற்றி சிறிது வலிக்கவே தனது கை கொண்டு அதனை தேய்த்துக் கொண்டாள் அவள் ... அவன் இப்போது நிதானமாக திரும்பி அவளைப் பார்த்தான்..


உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now