உயிரின் தாகம் காதல் தானே..💔27

1.9K 37 2
                                    

அன்பு செல்வன் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு இப்போது மகனைப் பார்த்தார்.
அவனோ அவரைக் கண்டு கொள்ளாமல் எங்கோ பார்த்தபடி நின்று இருந்தான்.

மீனாவிற்க்கு தான்
இவர்கள் யார் என்பது தெரியவில்லை ...
அவரது பார்வையை கண்டு கொண்ட வடிவுக்கரசி தான்
" நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதும்மா..
சாத்விக்கோட  பாட்டி தான் நான்.. இது அவனோட அப்பா.. இது அம்மா.. இவ தங்கச்சி..." என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள

மீனா அவரை பார்த்து புன்னகைத்தபடியே
"அப்படியா அம்மா... உங்களை பார்த்ததுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் ...அப்புறம் மயூரியை எனக்கு முன்னாடியே தெரியும்.. ரொம்ப நல்ல பொண்ணு அவ..." என்றார்...

  தங்களுக்குள் ஏற்பட்ட சிறிய மனக் கசப்பு காரணமாகவே மகனை பிரிந்து இருப்பதாக அன்பு செல்வன் வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் எடுத்து விட்டார்.
மதியழகி மற்றும் கனகா இருவரும் அவரை அதிர்ச்சியாக பார்க்க சாத்விக்கோ அவரை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

"ஐயோ அதுக்கு என்னங்க.. குடும்பம்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. அதை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது.. பையன் கல்யாணத்துல நீங்களே முன்ன நின்னு எல்லாத்தையும் பண்ணுங்க ..என் பொண்ணை உங்க குடும்பத்துக்கு அனுப்புறதுல ரொம்ப சந்தோசம் எனக்கு..."
என்று மீனா கூற அவர்களோ வாயெல்லாம் பல்லாக சரி என்பது போல் தலையை ஆட்டி வைத்தனர்.


இதில் சாத்விக்கிற்கு தான் பேச இடம் கிடைக்காமல் போனது. அவர்களுக்கு முன்னால் பெற்றோருடன் சண்டை போட அவன் விரும்பவில்லை. நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்
கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட்டான் அவன்..


தொடர்ந்து மீனாவே தான் ஜெயராணியிடம்
"ஆமா  மதி உங்களுக்கு எப்படி சொந்தம்..?"
என்று கேட்டிட அவரோ என்ன சொல்வது என்று  தெரியாமல் தடுமாறி விட்டார்.

ஆனால் பாட்டி தான் அவசரமாக "என் ரெண்டாவது பையன் அன்பரசன்னோட பொண்ணு.. அவளோட அம்மா அப்பா இப்ப உயிரோட இல்லை.."
என்று கூறினார்.மீனாவும்  அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.. எல்லோரும் பேசிக் கொண்டே இருக்க கனகாவை அழைத்துக் கொண்டு மதியழகி சமையலறைக்குள் நுழைந்தாள்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now