உயிரின் தாகம் காதல் தானே..💔11

1.6K 35 6
                                    

தன் முன்னே காபி கப்புடன் வந்து நின்றவளை  நிமிர்ந்து பார்த்து விட்டு அவளது கைகளில் இருந்த காபி கப்பை வாங்கி ஒரு மிடறு  பருகியவன் முகத்தை
சுழித்தபடி அவளைப் பார்த்தான்..

அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" இது எப்போ போட்ட காபி?
சூடே இல்ல .."
என்று அவன் சத்தம் போட அவளுக்குத் தான் சோர்வாக இருந்தது.

அவள் இப்போது போட்டது தான். ஆனால் முன்பு போல் வேகமாக கூட நடக்க அவளது உடலில் தெம்பு இல்லை.
மெதுவாக நடந்து வரும் போது அதன் சூடு ஆறி இருக்கும்.

அதை அவனிடம் சொல்ல முடியாது என்பதால் அமைதியாக இருந்தாள் அவள். அவளது அமைதி அவனது கோபத்தை மேலும் தூண்ட கையில் இருந்த கப்பை தூக்கி அவளது காலிலேயே  தூக்கி அடித்தான். எப்போதும் அவள் மேல் தான் வீசி எறிவான் .ஆனால் இன்று கோப்பையுடனேயே  காலில் போட அதை அவள் எதிர்பார்க்காததால் வேகமாக காலை கூட பின்னால் எடுக்க முடியவில்லை அவளால்.

அவன்  வேகமாக போட்டதில் காபி கப் அவளது காலை நன்றாகவே பதம் பார்த்து இருந்தது.
அது வெடித்து அதன் ஒரு முனை வேறு அவளது காலை கிழித்து விட ரத்தமும் வர ஆரம்பித்து விட்டது. காபியுடன் சேர்ந்து இரத்தமும் அந்த இடத்தை நிறைத்து இருந்தது.."ஆ.."
என்று வலி பொறுக்க முடியாமல் கதறினாள் பெண்ணவள்..

அதையும் இதழில் நக்கல் புன்னகையுடன் ரசித்துக் கொண்டு இருந்தான் ஷியாம் சுந்தர்.
கீழே குனிந்து தனது காலை பார்த்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை தான் .
சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின்பு அவசரமாக சமையலறை நோக்கி செல்ல

"ஹே நில்லு..."
என்றான் கட்டளையாக. அவனது குரலில் அவளும் பட்டென்று நின்று விட்டாள்.
" நான் உன்னை போக சொல்லவே இல்லையே ..நீ பாட்டுக்கு போற.."
என்று அவன் கூற
'இதற்கு மேலும் என்ன ?'
என்று வலி நிறைந்த கண்களோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்..

"உன்  துப்பட்டாவை கிழிச்சு காலை கட்டிட்டு எனக்கு ஃபிரஸ்ஷா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா .."
என்று அவன் கட்டளையிட அவளோ கண்ணீர் வடியும் கண்களுடன் அவனைப் பார்த்து

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now