உயிரின் தாகம் காதல் தானே 💔 24

1.8K 37 6
                                    


அங்கு இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க இதற்கெல்லாம் காரணமானவனோ கூலாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தனது ஃபோனை எடுத்து அதில் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் 
"பசங்களை கூட்டிட்டு வா..* என்று அவன் கூற இப்போது மதியழகிக்கோ உதரல் எடுக்க தொடங்கி விட்டது.

அருகில் இருந்த அண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டவள் கண்களில் கண்ணீர் வடிய "அண்ணா.." என்றாள் இயலாமையுடன்.. இதற்கு மேல் அவன் குழந்தைகளை தன்னிடம் விட்டு வைக்க மாட்டான் என்பதை அறிவாள் அவள்.
சாத்விக்கிற்கும்   இந்த கணம் என்ன செய்வது என்று தெரியவில்லை.

எனவே அவளது கைகளை தானும் ஆதரவாக பிடித்துக் கொண்டான்.
"சார் ..."
என்றபடி தூரத்தில் தீபக் வர அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது. அவனுடன் புதிய பட்டு பாவாடை சட்டையில் தான்வி அவனது கைகளை பிடித்துக் கொண்டு துல்லிய படி வர அவர்களுக்கு அருகே காலையில் இருந்த அதே உடையுடன் அழுத்தமான முகத்துடன் வந்தான் ஆருத்.

அவர்கள் மூவரும் அருகே வந்ததும் "அம்மா இதுதான் என்னோட பசங்க. டுவின்ஸ்.. தான்வி..ஆருத்.." என்றான் ஷியாம் சுந்தர் அறிவிப்பாக.
தான்வியோ அன்னையைக் கண்டு "அம்மா..."
என்றபடி அவளை வந்து கட்டிக் கொள்ள ஆருத்தும் அன்னையின் அருகில் வந்தான்.


அவர்களது உயரத்திற்கு குனிந்த மதியழகி பாய்ந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள்.
அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது .
இவ்வளவு நேரமும் நடப்பவற்றை எல்லாம் ராகவ்வின் அருகில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த கனகாவிற்கு மதியழகி கலங்குவதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எனவே அவள் அருகே சென்று "மதிம்மா.." என்றபடி அவளது தோளில் கை வைத்தார்.
ஆனால் அவள் தனது இரண்டு குழந்தைகளையும் விடவே இல்லை. அவர்கள் இருவரும் அன்னை அழுவதை கண்டு பயந்து விட்டனர்.
தான்வி அழவே ஆரம்பித்து விட்டாள்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now