உயிரின் தாகம் காதல் தானே..💔30

2.1K 39 7
                                    


இருவரும் ஒரே அறையில் தான் இருக்கிறார்கள்.
ஆனால் இருவரும் பேசிக் கொள்வது இல்லை. பேசிக் கொள்வது என்ன முகத்தைக் கூட பார்ப்பதே இல்லை என்றே கூறலாம்.
அவனுக்கோ அவனது ஈகோவை விட்டுக் கொடுத்து அவளிடம் சென்று பேச முடிவது  இல்லை..

ஆருத்திற்கு தான் ஷியாம் சுந்தருடன் அவன் அன்னை ஒரே அறையில் இருப்பது பிடிக்கவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தவன் முடியாமல் போக அன்று இரவு அவர்களது அறைக்கே வந்து விட்டான்.
" அம்மா நீங்க ஏன் இங்கே தூங்குறீங்க ?
எங்க கூடவே வந்துடுங்க ..எனக்கு நீங்க இவர் கூட தூங்குறது பிடிக்கவே இல்லை .."
என்று அங்கு லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்த ஷியாம் சுந்தரினை முறைத்து பார்த்தபடியே கூறினான் .‌

மகனது பேச்சைக் கேட்ட ஷியாம் சுந்தர் அவனை சுவாரசியமாக பார்த்தான் என்றால் கண்டிப்பாக பார்வை ஒன்றே மகன் புறம் வீசினாள் மதியழகி.
அன்னையின் பார்வையை உணர்ந்தவன்
"சாரிம்மா ...எனக்கு பிடிக்கல. அதனால தான் சொன்னேன்.." என்று விரைப்பாகவே கூறினான்.

தந்தைக்கும் மகனை நினைத்து பெருமையாக இருந்தது. தன்னைப் போலவே பேச்சும் செயலும் தனது குழந்தையிடம் இருந்தால் எந்த தந்தைக்குத் தான் பெருமை இருக்காது..
அவனை கண்டிக்கவும் முடியாமல் கணவன் அவர்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவள்
" கண்ணா வா தூங்கலாம் .."
என அவனை அழைத்துக் கொண்டு அவர்களது அறைக்கு சென்றாள்..

அப்போது அறையில் இருந்து வெளியே வந்த தான்வி
தந்தையைத் தேட மகளின் தேடலை புரிந்து கொண்ட மதி
" ரூம்ல இருக்கார் போ..."
என்றாள் .
மகனை தூங்க வைத்துவிட்டு அவள் வெளியே செல்ல முற்படும் போது தனது தோளில் தூங்கிக் கொண்டு இருக்கும் மகளுடன் உள்ளே வந்தான் ஷியாம் சுந்தர்.

மகனின் அருகில் மகளையும் கிடைத்தி விட்டு நிமிர்ந்தவன்
"வா போகலாம்.." என்று அவளை அழைத்துக் கொண்டு அறையை நோக்கி நடந்தான்.. அப்போது இவர்களை நோட்டமிடுவதற்கு என்று அந்தப் பக்கமாக வந்தாள் மயூரி.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now