உயிரின் தாகம் காதல் தானே..💔07

1.6K 31 2
                                    


கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு கண் திறந்த மதியழகி வெளியே வந்து பார்க்க அங்கே நின்று இருந்தது என்னவோ ஷியாம் சுந்தர் தான்.
அவனை கண்டதும் கண்களில் சற்று எஞ்சியிருந்த தூக்கமும் தூரப் போனது அவளுக்கு. அவனது முகத்தில் என்ன இருக்கின்றது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை...

" என்ன இன்னைக்கு தண்டனையை ஆரம்பிக்கலாமா? நல்லா தூங்கின தானே நைட்..."
என அவன் ஒரு மாதிரி குரலில் அவளிடம் பேச அவளுக்கு தூக்கி வாரி போட்டது ...

அவள் பேசாமல் இருப்பதை கண்டவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் உள்நுழைத்த படி அவள் முன்னே சற்று குனிந்து
" மதி ...மதியழகி ரைட் .
நான் பேசினா அதுக்கு பதில் வந்தே ஆகணும் ..பதில் பேசலன்னா கூட தண்டனை கடுமையாக இருக்கும்.."

என்று கூற தானாகவே அவள் தலை சரி என்பதைப் போல ஆடியது.
"குட்.."
எனக் கூறியவன்
"வா ..."
என்று விட்டு முன்னே நடந்தான்..

தயங்கி தயங்கி
" சா..சார்...."
என அவனை தடுத்து நிறுத்தினாள் அவள்.
இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் அவனுடன் பேசுகிறாள்.
சட்டென நின்று அவளை திரும்பிப் பார்த்தான் ஷியாம்.

என்ன என்று அவன் கேட்கவில்லை.. ஆனால் அவனது முகத்தில் என்ன என்ற கேள்வி தேங்கியிருந்தது..
பதில் சொல்லாமல் போனால் என்ன செய்வானோ என பயந்து அவசரமாக
"அது.. அது... .வ... வந்து
..பல்.. பல் ."
என கூறி முடிக்க முன்னரே அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன்

"நான் என்ன உன்ன கிஸ் பண்ணவா போறேன்..
பல் தேச்சுட்டு வர எந்த அவசியமும் இல்லை.. இப்படியே வா ..."
என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் அவன் கூறி விட்டு முன்னே நடக்க அவனது வார்த்தையை கேட்டு திகைத்தது என்னவோ மதியழகி தான்..

ஆனால் அவள் திகைத்து நின்றது ஒரு நொடி தான் ..அதற்கு மேல் தாமதித்தால் அதற்கும் ஏதாவது சொல்லி விடுவானோ என பயந்தவள் அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னே ஓடிச் சென்றாள்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now