உயிரின் தாகம் காதல் தானே..💔12

1.5K 33 3
                                    

நாய்களுக்கு உணவு கொடுக்காமல்  தூங்கிப் போன தனது  மடத்தனத்தை எண்ணி  தன்னையே நொந்து கொண்ட மதியழகி ஒட்டிக் கிடக்கும் உதட்டை கடினப் பட்டு பிரித்து
" இதோ வைக்கிறேன் சார்.. ரொம்ப உடம்புக்கு முடியல.. அதனால தான் தூங்கிட்டேன்.."
என்று கூறினாள்.

அவனிடம் தன்னிலை விளக்கம் கொடுக்கவே அவமானமாக இருந்தது அவளுக்கு.. இருந்தும் அவன் தனக்கு தண்டனை கொடுத்து விடுவான் என்ற பயத்தினாலேயே அவனுக்கு விளக்கம் கூறினாள்.

அவள் அவனுக்கு விளக்கம் கூறா விட்டால்  கூட  அவளை எதுவும் செய்யாமல் விட்டிருப்பான் போலும்.
அவனுக்கு இப்போது தான்  அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றிற்று..

" ஓ ரொம்ப முடியலையா?
சரி இப்போ ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடு.."
என்றான் ஒரு மாதிரி குரலில். அவனது குரலின் மாற்றத்தை உணர்ந்தவள்
ராமு , ராஜு இருவருக்கும் உணவை கொடுத்து விட்டு திரும்ப அவனும் அதுவரை அங்கேயே தான் நின்று இருந்தான்.

அவன் ஏன் இப்படி நிட்கிறான் என்று அவள் சங்கடமாக அவனைப் பார்க்க
" சீக்கிரமா நைட்டுக்கு சமைச்சிடு.. இப்போ ஒரு காபி போட்டு கொண்டு வா..
நைட்டுக்கு உனக்கு ஒரு வேலை இருக்கு.."
என்று கூறி விட்டு வேக நடையுடன் அறைக்குள் சென்று மறைந்து விட்டான் ‌.

இன்னுமே காய்ச்சல் இருக்கத் தான் செய்தது அவளுக்கு.. மறுத்திட முடியாத காரணத்தால் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள்
'என்ன வேலையை பற்றி அவன் கூறினான்?' என்று யோசனை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

அவளை அதிக நேரம் யோசிக்க கூட விடாது அங்கு வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர்.
  அவள் சமைத்து வைத்திருந்த உணவை நன்றாக வயிறு நிறைய உண்டு விட்டு
"வா கொஞ்சம் வெளியே போகலாம் .."
என்று கூறி முன்னே நடக்க பயத்துடன் மெல்ல நடந்து அவன் பின்னே சென்றாள் அவள்.

தோட்டத்திற்கு வந்து நின்றவன் மேலே பார்த்து
" அதோ பாரு வானம்... ரொம்ப அழகா இருக்குல்ல...?"
என்று மென்மையான குரலில் அவளிடம் வினவினான்.
அவனிடம் இதுவரை இப்படியான ஒரு குரலை கேட்டிறாதவள் சட்டென அவன் முகம் பார்த்தாள்.ஆனால்  பதில் எதுவும் பேசவில்லை.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now