உயிரின் தாகம் காதல் தானே. 💔26

1.9K 36 9
                                    


மயூரி தான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். வீட்டினருடன் கூட அவள் சரியாக பேசுவது இல்லை. எப்போதும் ஏதோ யோசனை செய்த வண்ணம் தான் அவள் இருப்பது. பாட்டிக்கும் மனது பொறுக்கவில்லை .
ஆசைப் பேத்தி இப்படி ஒரு நிலையில் இருப்பதை அவரால் கண் கொண்டு பார்க்கவே முடிவதில்லை .

அவளை அப்படி பார்க்க முடியாத காரணத்தால் அன்பு செல்வன் அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொண்டார். ஷியாம் சுந்தர்  மதியழகியை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த இரண்டு குழந்தைகளும் அவனுடையது என்றும் தான் அவருக்கு தகவல் கிடைத்தது ..

அதைக் கேட்டு ஆடித் தான் போய்விட்டார் அவர்.
' இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்வா?
அதனை அளித்தே தீர வேண்டும்' என்று முடிவு செய்தவர் தக்க தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

இப்போது  மகளின் அருகே சென்று அமர்ந்தவர் சுற்றி இருந்த தாயையும் மனைவியும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார்.

"மயூரி உனக்கு அவன் தான் வேணும்னா  என்ன கஷ்டப்பட்டாலும் அவனை உன் கூட சேர்த்து வைக்கிறோம்... நீ மட்டும் இப்படி இருக்காதம்மா.. பார்க்கவே முடியல..." என்று அன்பு செல்வன் கவலையுடன் மயூரியின் தலை வருடியபடி பேச எப்படி என்ற கேள்வியை தாங்கிய பார்வை வெளிப்பட்டது மயூரியிடம் இருந்து.


அதனை சரியாக புரிந்து கொண்டவர்
" மதியழகியை கொல்லனும். அப்புறம் ஈசியா அவன் லைஃப்க்குள்ள போயிடலாம் .."
என்று கூறி வில்லத்தனமாக புன்னகைத்தார் .
சுற்றி இருந்த மற்றவர்களும் அரக்கர்கள் என்பதால் அவரது யோசனை பிடித்து போக அவரைப் பார்த்து அதே புன்னகையை சிந்தினர் ..


"அப்படின்னா எதுக்குப்பா யோசிக்கிற ...
சீக்கிரமே அதை பண்ணு... அவ செத்தால்தான் என் பேத்தி சந்தோஷமா இருப்பான்னா உடனே அதை செய் ..."
என்று பாட்டியும் மதியழகியை தனது பேத்தி என்று மறந்து அவளை கொள்ளும் படி கூறினார்.


உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now