இப்படியே நாட்கள் கழிய அவனுடன் இன்பமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள் மதியழகி.
இதுவரை ஒரு முறை கூட அவன் தனது காதலை அவளிடம் கூறவில்லை.. அது அவளுக்கு துன்பத்தை கொடுத்த போதும் பொறுத்துக் கொண்டவள் அவனுக்கும் சேர்த்து தினமும் 10 முறைக்கு மேல் தனது காதலை வார்த்தைகளால் சொல்வாள். அதற்கும் இதழ் பிரியாத புன்னகை ஒன்றை சிந்துவானே தவிர பதிலுக்கு கூட காதல் என்ற வார்த்தையை கூற மாட்டான்.. ஆனால் முத்தத்தால் அவளை மூழ்கடிக்கவும் அவன் தவறுவது இல்லை.. அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்ததது.அவன் வார்த்தைகளால் காதலை கூறவில்லை என்றாலும் அவனுடைய செயல்கள் யாவும் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் அவனது ஆழமான காதலை .
ஆனாலும் மனது கேட்காமல் பொருத்து பொருத்து பார்த்தவள் ஒருநாள் அவனது அனைப்பில் இருந்த படியே
" ஏன் ஐ லவ் யூ என்று ஒரு வார்த்தை சொல்ல இவ்ளோ யோசிக்கிறீங்க..?" என்று கேட்டு விட்டாள்.அவளது உச்சந் தலையில் இதழ் பதித்தவன்
" என்னோட அன்பு உனக்கு வார்த்தைல சொல்லித் தான் புரியனுமா... என்னோட உயிர் போனாலும் இந்த ஆத்மா எப்பவும் உன்னையே தான் நினைச்சுட்டு இருக்கும்.. இது இன்னைக்கு நேத்து ஆரம்பித்த நேசம் இல்லை.. உன்னை எப்போ என் சின்ன வயசுல பார்த்தேனோ அன்னையிலிருந்து எனக்கு நீ தான்னு நான் முடிவு பண்ணிட்டேன். அது எனக்கு நீ கிடைச்சாலும் கிடைக்கலனாலும் நான் சாகும் வரை இருந்துட்டே தான் இருக்கும்.. என் வாழ்க்கையில ஒரு பொண்ணு வந்தான்னா அது நீ மட்டுமா தான் இருக்கணும் ..இப்போ நீ என் பக்கத்தில் இல்லைனா கூட நீ மட்டும் தான் என்னோட வாழ்க்கை முழுசுக்கும் ..இது எல்லாம் என்னோட டையரிய படிச்சப் போவே உனக்கு தெரிஞ்சி இருக்கும்னு நான் நினைச்சேன்.."என்றான் நிதானமாக..அவள் எதிர்பார்த்த அந்த மூன்று வார்த்தையில் கூட இத்தனை காதல் இருந்து இருக்காது போலும். அப்படி ஒரு திருப்தியான பதில் அவனிடமிருந்து வந்தது.. இறுக்கமாக அவனை அனைத்து தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினாள் அவனுடைய காதல் மனைவி மதியழகி..