உயிரின் தாகம் காதல் தானே 💔 32

1.9K 39 9
                                    


அன்று காலையிலேயே கோயிலுக்கு கிளம்பி விட்டாள்
மதியழகி .அவளுக்கு ஏனோ நிதானமாக யோசிக்க வேண்டி இருந்தது ..
தனக்குள்ளே ஏற்பட்ட மாற்றங்களை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.எனவே மனதை அமைதி படுத்த வேண்டும் என்று கோயிலுக்கு கிளம்பி விட்டாள் அவள்..

நிதானமாக சாமி கும்பிட்டு விட்டு அப்படியே ஒரு இடத்தில் அமர்ந்து அங்கிருந்த தூணில் தலை சாய்த்துக் கொண்டாள்.
" நான் ஏன் இப்படி மாறிட்டேன்.. அவரை கஷ்டப்பட வைக்கணும்னு நினைச்சுட்டு இருந்த நான் அவரோட டைரியை  பார்த்ததும் அப்படியே மாறிட்டேனே.. அதுல அவர் என்னை லவ் பண்றேன்னு கூட எழுதி இருக்கல..

ஏதோ என் மேல ஈர்ப்பு, என்னை நினைச்சுட்டு வாழ்ந்தேன்னும் என்னை அவர் கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்பட்டதாகவும் எழுதியிருந்தார்.. அவரும் என்னை லவ் பண்றாருன்னு தான் நினைக்கிறேன்.. ஆனா அவருக்கு அவருடைய ஈகோவை விட்டுட்டு அதை வெளியே சொல்ல முடியல அவ்வளவுதான்..."

அவளது எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது.. இப்போது அவள் மீது அவளுக்கே சந்தேகம் தோன்ற ஆரம்பித்து இருந்தது..
' நான் மாறிட்டேன்னா அவரை லவ் பண்றேன்னு அர்த்தமா..? எப்படி இது சாத்தியம் ...அவருடைய தப்புக்கான தண்டனையை யார் கொடுப்பா...?"
என மேலும் குழம்பிப் போனாள்.

'அவன் வேண்டும் என்று தனக்கு தண்டனை கொடுக்கவில்லை.. தன்னை தவறாக புரிந்து கொண்டு தான் இத்தனையும் செய்து இருக்கிறான்.. அது மட்டுமல்லாமல் அதற்கு தண்டனை கொடுத்துவிட்டு தன்னைவிட அவனும் வருந்திகிறான்.. மேலும் அவனுக்கு மகள் மீதும் மகன் மீதும் அதிக பாசமும் உண்டு..' என்று அவளது மனது அவனுக்காகவும் வாதிட்டது..

தெளிவு பெற வேண்டி கோயிலுக்கு வந்தவள் மேலும் குழம்பித் தான் போனாள்.
அதன் பிறகு அங்கு நிற்காமல் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் அவள் குழப்பமான மனநிலையோடு..

*****************

   ஷியாம் சுந்தர் வேலை விடயமாக வெளியூர் சென்று இருந்தான்.. அவன் சென்று இரண்டு நாட்கள் கடந்து இருந்தன ‌.. எனவே இப்பொழுது தங்களது அறையில் மதியழகி மட்டுமே தூங்கிக் கொண்டிருந்தாள். நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தவளுக்கு ஏதோ வித்தியாசமாகப்பட திடீரென்று கண்களை திறந்து பார்த்தாள் அவள்.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now