உயிரின் தாகம் காதல் தானே. 💔13

1.5K 35 2
                                    


அடுத்து சாத்விக் செய்தது தனது நண்பன் ஒருவனிடம் ஷியாம் சுந்தரை பற்றி விசாரிக்க சொன்னது தான்.
அவன் நினைத்ததற்கு மாறாக ஷியாம் சுந்தர் கடினமானவனாக இருந்தான். தனக்கு யாராவது தொழிலில் துரோகம் செய்து விட்டால் அவன் கொடுக்கும் தண்டனைகளை கேட்டு அறிந்தவனின் உடம்பு பயத்தில் உதறல் எடுத்தது.

அப்படி கடுமையாக இருப்பவனது வீட்டுக்குள்ளேயே சென்று இருக்கும் தனது தங்கையை நினைக்கையில் பயமாக இருந்தது அண்ணன் அவனுக்கு.
'அவன் என்ன செய்து இருப்பானோ தனது தங்கையை'
என்ற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டே இருந்தது ..

எப்படியாவது அவனிடமிருந்து மதியழகியை மீட்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன் ஷியாம் சுந்தரை கவனிக்க ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் அவன் தான் இப்போது சென்னையில் இல்லையே. அதை அறியாத சாத்விக் அவனது ஆஃபீஸ் மற்றும் வீடு உள்ள பக்கம் என்று அடிக்கடி சென்று பார்க்க ஆரம்பித்தான் தங்கையை பற்றிய ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என்று.

*******************

வெறும் இரண்டு நாள் மாத்திரம் தான் மதியழகியால் நிம்மதியாக இருக்க முடிந்தது அந்த வீட்டில். மூன்றாம் நாள் காலையிலேயே வந்து நின்றான் ஷியாம் சுந்தர். அவன் காலை நேரமே வருவான் என்பதை அறிந்திராத மதியழகி பயத்துடன் அவனது முன்னாள் வந்து நிற்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட்டான்..

அதுவும் ஒரு வகையில் நிம்மதி தான் என தோன்ற தனது வேலைகளை செய்ய தொடங்கி விட்டாள் அவள் .
அன்று ஏனோ அவளுடன் எதுவும் பேசாமல் அவள் சமைத்து வைத்திருந்த உணவை உண்டு விட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

தீபக்கிடம் இருந்து சாத்விக் அவனது வீட்டையும் ஆபீசையும் நோட்டமிடும் செய்தி அவன் காதுகளுக்கு வந்து சேர்ந்து இருந்தது ஏற்கனவே.
ஆனால் அவனுக்கு வருணிக்காவும் சாத்விக்கும்  காதலிக்கும் விடயம் தெரியாது. வருணிகா படிக்கும் பெண் என்பதால் சாத்விக் வெளியில் அவளை  சந்தித்து பேசுவது கிடையாது .
ஆகவே ஷியாம் சுந்தருக்கு அந்த காதல் விடயம் தெரியாமல் போனது ..


உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now