உயிரின் தாகம் காதல் தானே 💔 23

1.8K 35 4
                                    


துப்பாக்கியை அவளது வாய்க்குள் வைத்ததும் அவன் எதிர்பார்த்த பயம் அவள் கண்களில் தென்பட்டது ..
அதில் அவனது இதழ்களோ தாராளமாக விரிந்து கொண்டன. ஆனால் துப்பாக்கியை எடுக்கவில்லை அவன்.

" என்னோட குழந்தைகளை என்கிட்ட இருந்து மறைச்சுட்ட.. உன்னை என்ன பண்ணலாம்..?"
என மேலும் துப்பாக்கியை அவள் வாய்க்குள் தினித்தான்.
அவனது செயல் அவளை பயமுறுத்தியதை விட அவனது வார்த்தைகளே அவளை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றே கூறலாம்.
'  எப்படி அவனுக்கு தெரிஞ்சது?'
என்று நினைத்தவள் கண்களால் இல்லை என்று சைகை
செய்தாள்‌.


அவளது கண்கள் ஏதோ கூற வருவதை புரிந்து கொண்டவன் துப்பாக்கியை அவளது வாய்க்குள் இருந்து எடுத்து விட்டான். அவன் விட்டதும் நேராக நின்று கொண்டவள்
"உங்களுக்கு எப்படி?"
என்றாள்.

அவளால் அவ்வளவு தான் பேச முடிந்தது. குழந்தைகள் பற்றி அறிந்த பிறகு என்ன செய்வானோ என்ற பயம் அவளிடம்.
" உனக்கு எதுக்குடி அது எல்லாம்... என் குழந்தைகளை பத்தி என்கிட்டயே  மறைச்சுட்ட.. நீ ரொம்ப ஸ்மார்ட் தான் .."
என்று அவளை நக்கலாக பாராட்டவும் செய்தான் அவன்.


அதில் அவளுக்கு இது நாள் வரை வராத கோபம் வந்தது.
" பின்ன என்ன பண்ண சொல்றீங்க? உங்க கிட்ட வந்து நான் பிரக்னண்டா இருக்கேன்னு சொல்லவா சொல்றீங்க... அப்படியே நான் சொல்லியிருந்தாலும் என்ன பண்ணி இருப்பீங்க... உடனே கையில தூக்கி வச்சு கொஞ்சவா போறீங்க... என்னை உங்க ஆசைக்குத்தானே பயன்படுத்துனீங்க... அதுல நான் வந்து குழந்தைங்கன்னு உங்க முன்னாடி நின்னா ஒன்னு என்னை கொன்னு போட்டு இருப்பீங்க.. இல்லை குழந்தையை கருவிலேயே அழிச்சுருப்பீங்க.. நீங்க ஒரு ராட்சசன்... இதைத் தான் செய்வீங்க.." என்று குரலை உயர்த்தி அவன் முன்னால் கைநீட்டி பேசினாள் அவள்.

ஆனால் அவனா இதற்கு எல்லாம் அசுருபவன்..
" ஏய் என்னோட குழந்தைங்களை நானே அழைப்பேனாடி ...
அந்த அளவுக்கு ஒன்னும் என் அம்மா என்னை கேவலமா வளர்க்கலை..." என்றான் அவனும் அவளைப் போலவே.

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now