ஏதேதோ மாற்றம் வந்து
என்னைத்தான் துண்டு போடுதே
ஏகாந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதேநின்றாலும் நடக்கும் போதிலும்
நண்பர்கள் சிரிக்கும் போதிலும்
ஒட்டாமல் வாழ்கிறேன்
என்னிடம் நான் இல்லை.....பழைய நினைவுகளுடன் தன்னிலை மறந்து அமர்ந்து கொண்டிருந்தவளை
"ஹலோ எல்லோ சுடிதார்" என யாரோ கத்தும் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள்....தன்னைத் தான் அவள் அப்படி கூப்பிடுகிறாள் என்பதை கூட அறியாமல் அவளின் பின்புறம் சென்று கொண்டிருந்த மனோவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.....
வீட்டில் உம்மென்று இருந்த மனோவிற்கும் இப்போது இருக்கும் மனோவிற்கும் எவ்வளவு வித்தியாசம்....
முதன் முதலில் அவனை எப்படி பார்த்தாலோ அதே மாதிரி தான் இருக்கிறான் இப்பொழுதும்....
"ம்ம்ம்க்கும் இவ்ளோ அழகா இருந்தா...எல்லா பொண்ணுங்களும் சைட் அடிக்க தானே செய்வாங்க..வீட்டுக்கு வந்ததும் முதல்ல தார் எடுத்து மூஞ்சில பூசி விடணும்...அந்த முடி அதுப்பாட்டுக்கு இருக்கு....அத ஏன் சும்மா சும்மா கலச்சுட்டுட்டு இருக்க....இரு லாலிபாப் மொட்டை அடிச்சு விடுற...."அவனைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்தவள் தன்னருகே ஒரு ஜீவன் வந்து நின்றதைக் கூட கண்டு கொள்ளவில்லை...
"எம்மா எல்லோ சுடிதார்...ரொம்ப நேரமா உன்னை கூப்பிடுறேனே....காது இங்க இருக்கா??இல்லை வாடகைக்கு விட்டுட்டியா???"அந்த புதியவள் கேட்க....
ஆஆஆஆன் என திருத்திருவென முழித்துக் கொண்டிருந்தாள்....
"யம்மா...நான் பொண்ணு தான்...என்னமோ பசங்க உன்னை கூப்பிட்டு ரேக் பண்ணுற மாதிரில நீ பில்டப் கொடுக்கிற"
"அய்யோ இவ வேற....நானே இவ எப்போ வந்தா...நான் இவ்ளோ நேரம் லாலிபாப் பத்தி பேசுனத கேட்டாளா இல்லையானு தெரியாம முழிக்கிற...அது தெரியாம மொக்கைப் போட்டுட்டு இருக்கா"என மனதில் அவளை அர்ச்சித்தாள்......
YOU ARE READING
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
Romanceஉன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......