பகுதி -26

5.1K 218 271
                                    

தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

என்னடா முகி சொல்லுற??அப்போ என் மேஹா என்னை ஏத்துக்க மாட்டாளா??

"அய்யோ மச்சான் நான் அப்படி சொல்லலை.மேஹா அப்படி நினைக்கவும் வாய்ப்பு இருக்கேனு சொல்லுறேன்"என முகி கூற

அவள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்ற பயம் வர அப்படியே நாற்காலியில் சரிந்தான்.

"டேய் மச்சான் நீ ஃபீல் பண்ணாத.மேஹாக்கு நீ மட்டும் தான் எல்லாம்...உன்னை எப்படி அவ வேணாம்னு சொல்லுவா?"

"ஆமால மேஹாக்கு என்னைத் தான் பிடிக்கும்.முகி உன் தங்கச்சி என்னை விட்டுட்டு போ மாட்டா தான.அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைத்து கூட பார்க்க முடியலடா.
அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்??அவ தான என்னைப் பார்த்துக்கணும்,அவ வேணும் எனக்கு"எனக் கூறியவனின் கண்கள் கலங்க

"காலையில் நல்லா வந்தவனை இப்படி அழுக வைத்துவிட்டேனே"என முகி வருந்தினான்.

"உன் மேஹா டா உனக்கு மட்டும் தான் ஓகே வா?"

"ம்ம்ம் ஆனா???"

" என்ன ஆனா??"

"நீ சொன்ன மாதிரியே அவளும் சொன்னா???"

"எப்படி சார் நிலா நிலானு சொல்லிட்டு இப்போ என்மேல லவ் வந்துச்சுனு அவ கேட்டா என்ன பண்ணுவனு தானே டா கேட்டேன் நான் தான் இப்படி லூசு மாதிரி யோசிப்பேன்.
என் தங்கச்சி அப்படிலாம் யோசிக்க மாட்டா" எனக் கூறி அவனை சமாதானப்படுத்தினான்.
(ஒருவேளை மேஹாவும் இதையே கேட்டா)

"டேய் சிறப்பு விருந்தினர் வர நேரமாச்சு சீக்கிரம் வா"எனக் கூறி விட்டு முகி விழா நடக்கவிருக்கும் இடத்திற்கு சென்றான்.

அங்கு மேஹாவை அவள் தோழிகள் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

"மேஹா என்னடி உன் முகம் இவ்வளவு அழகா பளிச்சுனு இருக்கு டல் மேஹா தூள் மேஹா ஆகிட்டாளே"எனத் தோழிகள் கலாய்க்க

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now