பகுதி 43

3.9K 202 107
                                    

அடியே பெண்ணே
அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை
நீ தாங்க வா
மடி மேல் அன்பே
பொன் ஊஞ்சல் நானும் செய்தே
தாலாட்ட உன்னை அழைப்பேன்

காலையில் சீக்கிரமே எழுந்தவள் தன் கை பாரமாக இருப்பதை உணரந்து கண் விழிக்க அபி அவளது கைக்குள் தன் கை கோர்த்து அவளுக்கு மிக அருகில் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

அவன் நெற்றியில் விழுந்து அவன் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் அவனது தலைமுடியை சரி செய்தவள் அவனது நெற்றியில் இதழ் பதித்து விட்டு எழுந்து அமர்ந்தாள்.

குளித்து முடித்து அவனுக்கு காபியுடன் வந்தவள் அவனை எப்படி எழுப்புவது என யோசித்துக் கொண்டிருக்க

" என்ன மார்னிங் யோசனை பலமா
இருக்கு" சோம்பல் முறித்து கொண்டே அவன் எழுந்து கண்களை கசக்க

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள்(சைட்😝) "உங்களைத்தான் " என புலம்ப

"நான் தான் எழுந்துட்டனே" என்றவன் அவளை என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த

நாக்கைக் கடித்தவள் "ஈஈஈ" என்றவாறு டேபிளின் மீது காபியை வைத்து விட்டு உங்களுக்கு டைம் ஆச்சு சீக்கிரம் எனக் கூறி வெளியே ஓடி விட்டாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் சிரித்து விட்டு பிரெஸ்ஸாகி வந்து காபியை எடுத்துக் கொண்டு கிட்சனுக்கு சென்றான்.

சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன் "என்ன தியா மேடம் மார்னிங் என்ன ஸ்பெஷல்" என்றவன் தியாவைப் பார்க்க

பிங்க் டீ சர்ட்,ப்ளாக் சார்ட் ஸ்கர்ட்
அணிந்து தலைக்கு குளித்திருப்பதால் தலையில் கட்டிய ஈரத்துண்டுடன் அவனுக்கு சமையல் செய்து கொண்டிருந்தாள்.

குளித்ததும் சாமி கும்பிட்டிருப்பாள் போல ஒரு சிறிய திருநீர் கீற்று இருக்க அது அவளை இன்னும் அழகாக காட்டியது.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now