வெள்ளை பூவே
நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை மறைகின்ற அழகி
உந்தன் உயிரை என் சுவாசம்
தொடுதேனா கூறடி வந்து கூறடிநிலவே மலரே கவியே
அழகே அணையா ஒளியே
என் நெஞ்சுக்குள்ள வா வாதன் டிபார்ட்மெண்ட்டினுள் நுழைந்த மனோ பார்த்தது இரண்டு பெண்கள் அவன் கேபினில் அமர்ந்திருப்பதைத் தான்.
உள்ளே செல்ல காலடி எடுத்து வைக்க
அங்கே திவியோ "யாருடி இந்த மனோ சார் பேரு கொஞ்சோ நல்லா தான் இருக்கு சைட் அடிக்கிற அளவுக்கு வொர்த்தா இல்லையானு வேற தெரியல பாரு கடைசியில ஒரு சொட்டத் தலையன் வந்து நிக்க போறான்"என்றவள் நிலாவைப் பார்க்க அவளோ திவியை முறைத்துக் கொண்டிருக்க"இன்னா டி ஆவுனா முறைக்கிற ஒருவேளை நீ எனக்கு ஒன்னு விட்ட முறைப் பொண்ணா இருப்பியோ???" திவி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு யோசிப்பதைப் போல் பாவனை செய்ய
"நிஜமாவே ஒன்னு விட்டுருவேன் பாத்துக்கோ அவரு எப்படியோ இருந்துட்டு போகட்டும் உனக்கு என்ன??"புருவத்தை தூக்கி நிலா முறைத்தாள்.
நிலாவின் முகத்தை இதுவரை பார்க்காமல் இருந்த மனோ திவியின் பாடலில் அவள் முகத்தைப் பார்த்தான்.
கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...எனப் பாடியவள் அவள் இன்னும் அதிகமாக முறைப்பதைக் கண்டு வாயை கப் சிப் என்று மூடிக் கொண்டாள்.
"அது என்னடி இன்னா னு லாம் பேசுற நீ எப்போ சென்னை பாஷை பேச ஆரம்பிச்ச"என நிலா கேட்க
"அதுவா அது அது ஒரு குட்டி நொறுக்கு மேட்டர் டி"என திவி கூறினாள்.
"என்னடி என்னனம்மோ சொல்லுற
உங்க அப்பா என்னை நம்பி தான் உன்னை அனுப்புனாரு ஏதாச்சும் பண்ணித் தொலைக்காத""ம்ம்க்குகும் ஹலோ கோவக்கா உங்க மீசைக் கார டாடியும் என்னை நம்பி தான் உன்னை அனுப்பினாரு நியாபகம் இருக்கட்டும் நானாச்சும் நொறுக்கு தான்.
ஆனால் நீ பாலோ லாம் பண்ணுற"எனக் கூற
YOU ARE READING
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
Romanceஉன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......