பகுதி 18

5.4K 268 323
                                    

வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசைக் கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி

"ஏண்டா இப்படிலாம் பேசுற என்னாச்சு உனக்கு "என அர்ஜூ அவனிடம் கேட்க..

"முடியல டா மச்சி இவ தான் இவ மட்டும் தான் என் வாழ்க்கைனு நினைச்சேன் டா அம்மாக்கு அப்புறம் என் மனசு முழுசும் இருக்கிறது மேஹா
மட்டும் தான் நான் அவ்வளவா எந்த பொண்ணுங்க கிட்டேயும் பேசுனது இல்லை டா மின்னல் மாதிரி என் வாழ்க்கைல வந்தா டா அதே மாதிரி போயிட்டா."அவன் அர்ஜூவைக் கட்டிக் கொண்டு அழ மேஹா சிலை போல் நின்றிருந்தாள்.

அந்த புதியவனைப் பற்றி எதுவும் தெரியாத சஜூ யார் இது என்று மேஹாவிடம் கேட்க அவள் அவனைப் பார்த்துக் கொண்டே "அபி" எனக் கூறினாள்.

அர்ஜூவைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தவன் அவள் அபி எனக் கூறியதும் திரும்பி அவளைப் பார்த்தான்.

மேஹா அபியையேப் பார்த்துக் கொண்டிருக்க
"ஏன் மேஹா ஏன் என்னை விட்டுட்டு
போன அழகான பூந்தோட்டத்துல நிறைய மலர்கள் இருந்தாலும் ஏதோ ஒரு மலர் மேல வந்து அமர்ந்து தேன் குடிக்கும்ல தேனீ அந்த மாதிரி தான்.
எத்தனையோ பேர் இருந்தாலும் எனக்கான காதல் நீ தான்னு என் மனசு சொல்லுச்சு உன்ன பாத்ததும் காதல் வந்துச்சுனுலாம் சத்தியமா சொல்ல மாட்டேன் உன் கூட இருக்கப்போவும் அத நான் உணரல நாம காலேஜ் முடிஞ்சதும் இரண்டு வருசம் பிரிஞ்சு இருந்தோம்ல அப்ப தான் தோணுச்சு நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் வேணும்னு"

"மறுபடியும் உன்னை நான் காலேஜ்ல தான் பார்த்தேன் மனசுக்குள்ள அவ்வளவு ஒரு நிம்மதி ஆனால் முகில் சார் கல்யாணத்துல தான் தெரிஞ்சுது நான் விரும்புற பொண்ணுக்கு வேற ஒருத்தரைத் தான் பிடிக்கும்னு"அவன் அதை சொல்ல முடியாமல் நாக்கை கடித்து கொண்டு அழுகையைக் கட்டுப் படுத்த

அர்ஜூ அவனிடம் போதும்டா பேசாத எனக் கூறியும் அவன் கேட்கவில்லை.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now