பகுதி 45

3.5K 184 43
                                    

மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன்
ஹோ கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்னை
ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

"முடியாது மேஹா சொன்னா சொன்னது தான்" மனோ லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே அவளிடம் கூற

அவனைப் பார்த்து முறைத்தவள்
அவனது லேப்டாப்பை பிடுங்கி அருகில் வைத்து விட்டு அவன் மடிமீது அமர்ந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் கட்டிக் கொண்டு"மனோ பாவால என் தங்கம்ல என் செல்லம்ல ப்ளீஸ் வேணாமே" என கெஞ்ச

இப்போது அவன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு" என் செல்லக் குட்டில என் அம்முக்குட்டில நம்ம போறோம்" எனக் கூறி சிரிக்க

அவனை முறைத்தவள்
எழுந்து அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.

சிரித்துக் கொண்டே அவளருகில் படுத்தவன் அவளைத் தன்புறம் இழுக்க அவன் புறம் திரும்பியவள்
" பாவா பாவா பாவாவாவா " என இழுக்க

"சொல்லுடி செல்லம்"

"என் செல்ல பாவா என் அம்மு பாவா நான் என்ன சொன்னாலும் கேட்பீங்க தானே"

" ம்ம் கேட்பேன்"

" நம்ம இன்னும் ஒரு வாரம் இங்கே இருந்துட்டு போலாமே அம்மா,அப்பா,அகி பேபியை லாம் விட்டுட்டு எப்படி அங்கே போறது"

"இப்போ உனக்கு அவங்களை விட்டுட்டு போறது தான பிரச்சனை அது தானே"

"ஆமா ஆமா " என அவள் வேகமாக தலையாட்ட

"அப்போ அவங்களையும் அங்கே கூட்டிட்டு போலாம்" எனக் கூறிச் சிரித்தவனை

"அய்யோ என்ன சொன்னாலும் இவர் இப்படி அணை போட்டா எப்படி மேஹா நீ பாவம் டி"  என மனதில் நினைத்தவள்

"அது அதுஅவங்களுக்கு... அவங்க அங்க இருக்க முடியாது மனோ சார் அங்கே எப்படி இருப்பாங்க...."

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now