பகுதி 16

6K 239 415
                                    

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
யார் இவன்... யார் இவன்...
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் 

கண்கள் மனோவையே தேட அவன் தான் அவள் கண்களுக்கு அகப்படவில்லை.

தன்னவனை நாள் முழுவதும் காணாமல் பெண்ணவள் மனம் ஏங்க ஒருவேளை அவனுக்கு உடல் நலம் தான் சரியில்லையோ என நினைத்தவள் மாலை சீக்கிரமே கிளம்பி வீட்டிற்கு சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கண்களில் பட்டது அவன் ஆசை நாயகன் தான்.

சூரியனைக் கண்டு அழகாய் சிரிக்கும் சூரியகாந்தி போல அவள் முகம் மாறியது.

டைனிங் டேபிள் மேல் தலைக்கு கை கொடுத்து படுத்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் சென்றவள் அவனுக்கு எதிரே அமரந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


திடீரென கண் விழித்தவன் எதிரே மேஹாவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவன் செய்கையைக் கண்டு சிரித்தவள் "ஹலோ சார் பிரியாணி காலியா😜😜ரோடுல ரொம்ப நாளா சுத்திட்டு இருந்த நாயைக் காணோமாம் மாமி நான் வரப்போ சொன்னாங்க நீங்க எதுவும் பிரியாணி போடலையே??"கூறி விட்டு அவள் நாக்கைக் கடிக்க

"நான் எதுவும் போடலையே"கூறிய பின் தான் அறிந்தான் அவள் கலாய்த்ததை.

அவளைப் பார்த்து முறைக்க

"ஈஈஈஈஈ"என்று இளித்தவள் எழுந்து தன் அறைக்குச் செல்ல

அவள் கைகளைப் பிடித்து இழுத்தவன்
"நான் செய்யறதையா கிண்டல் பண்ணுற ஒழுக்கமா இப்ப நான் செஞ்சத சாப்பிடுற"என்றவன் அவள் தோள்பட்டையை பிடித்து நாற்காலியில் அமர வைத்து சாப்பாடு பரிமாறினான்.

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now